ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன?
சென்னை: ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக அறிவித்தார்.
இதன்படி ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பரில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி டுவிட்டரில் இன்று அறிவித்தார். அவர் தனது ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு
ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், "ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்ப்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

வைகை செல்வன்
ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அனைவருக்கும் கட்சி தொடங்கும் உரிமை உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் ஒபிஎஸ் இபிஎஸ் சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எங்கும் செல்லவில்லை" என்றார்.

கூட்டணி
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கியதை வரவேற்கிறேன். அவருடைய வரவு நல்வரவாகட்டும். அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமையும்.

முதல்வர் கருத்து
முன்னதாக சேலத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர், முழுமையாக ரஜினிகாந்த் பேசியதை பார்த்து, ஆலோசித்து கருத்து கூறுகிறேன் என்று கூறினார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications