Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிடிஆர்".. வெறும் 48 மணி நேரத்தில் 4 சம்பவங்கள்.. பாஜகவிற்கு அடுத்தடுத்து "தர்ம சங்கடம்".. போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிக்கிழமை பிற்பகலில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி 4 தர்மசங்கடங்களை எதிர்கொண்டு உள்ளது. அடுத்தடுத்து பாஜகவில் நடக்கும் சம்பவங்களால் அக்கட்சி விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது..

Recommended Video

    Pakistan போல India மாறாமல் இருக்க இதை செய்ய வேண்டும் - PTR

    மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார்..

    அப்போது பாஜகவினர் இவரின் காரில் செருப்பு வீசி எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர் தற்போது கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.

     தர்மசங்கடம் 1

    தர்மசங்கடம் 1


    இதனால் பாஜக மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. பாஜகவின் இந்த செயல் குறித்து அதிமுகவே விமர்சனம் செய்யும் அளவிற்கு நிலைமை கைமீறி போனது. அதோடு பாஜகவில் மதுரை மாவட்ட தலைவராக இருந்த சரவணன் கட்சியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதோடு பாஜகவில் மத அரசியல் செய்யப்படுவதாகவும் சரவணன் புகார் அளித்தார். இவர் நேராக சென்று பிடிஆரிடம் மன்னிப்பும் கேட்டார். ஒரு மாவட்ட தலைவர் இப்படி செய்தது பாஜகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

     தர்மசங்கடம் 2

    தர்மசங்கடம் 2

    அதோடு கடந்த வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாஜக நகர தலைவர் பரமகுரு கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவிற்கு கல்லெடுத்து சென்ற லாரி மீது கல்லை வீசி தாக்குதல் நடத்தி உள்ளார். அத்துமீறி கல்லை எடுத்து செல்வதாக பாஜகவினர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். லாரியை மறித்து போலீசில் புகார் அளிக்காமல் இவர்களே லாரியின் கண்ணாடிகளை உடைத்து கலவரம் செய்ததால், போலீசார் பரமகுரு உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

    தர்மசங்கடம் 3

    தர்மசங்கடம் 3

    இது போக நேற்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். இங்கே உள்ளே செல்ல இவருக்கு அனுமதி தரப்பட்டது. இருந்தாலும் போலீஸ் வந்து கதவை திறக்கும் வரை காத்திருக்காமல் இவர் பூட்டை உடைத்தது பெரிய சர்ச்சையானது. இது தொடர்பாக மொத்தம் 4 பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தர்மசங்கடம் 4

    தர்மசங்கடம் 4

    இது போக நேற்று திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார். இளங்கலை பட்டத்திற்கான தேர்வில் இளைஞர் ஒருவரை அனுப்பி இவர் ஆள்மாறாட்டம் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்த நிலையில் தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    2 நாள்

    2 நாள்

    சரியாக 48 மணி நேரத்தில் பாஜகவிற்கு 4 தர்மசங்கடமான சம்பவங்கள் நடந்துள்ளன. அடுத்தடுத்து பாஜகவை சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் இவர்கள் சாதாரண நிர்வாகிகள் கிடையாது. நகர, மாவட்ட தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சனிக்கிழமை பிற்பகலில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி 4 தர்மசங்கடங்களை எதிர்கொண்டு உள்ளது. அடுத்தடுத்து பாஜகவில் நடக்கும் சம்பவங்களால் அக்கட்சி விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+