சென்னையில் எந்தெந்த தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தெரியுமா?
சென்னை: சென்னையில் எந்தெந்த தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
சென்னையில் குழுமங்களாக செயல்படும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 10.40 மணிக்கு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டுள்ளது.

ஒரே மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் அந்தந்த எல்லைக்குள்பட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே பள்ளி நிர்வாகத்தினரின் தகவலை அடுத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவசர அவசரமாக வந்து அழைத்து செல்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படாத பள்ளிகளுக்கும் பெற்றோர் பதற்றத்துடன் செல்கிறார்கள்.
எந்தெந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
கோபாலபுரம் டிஏவி ஆண், பெண்கள் பள்ளி
சென்னை திருமழிசை, முகப்பேர், அண்ணாநகரில் உள்ள சென்னை பப்ளிக் பள்ளி
சென்னை பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளி
கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் வித்யாஸ்ரம்
ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம்
எழும்பூர், பெரம்பூர், பூந்தமல்லியில் உள்ள சனா ஸ்மார்ட் பள்ளி
கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி












Click it and Unblock the Notifications