அவசரமாக காரை எடுத்த ஜெயக்குமார்.. பின்னாடியே வந்த ஓபிஎஸ்! ஒரே ஒரு வார்த்தையில் சொன்ன பதில்.. போச்சே!
சென்னை: இன்று அதிமுக அலுவலகத்தில் இருந்து ஜெயக்குமார் வெளியேறியதும் பின்னாடியே ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
பெரும் பரபரப்பிற்கு இடையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல்நாள் நடந்தது. எதிர்பார்த்தபடியே நேற்று நடந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது.
நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 20 நிர்வாகிகள் ஒற்றை தலைமை குறித்து பேசினார். முதலில் மாதவரம் மூர்த்திதான் ஒற்றை தலைமை பற்றி பேசி இருக்கிறார். அதன்பின் எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், குறி கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி ஹரி, அருள்மொழி தேவர், சி விஜயபாஸ்கர், கோகுல் இந்திரா, வளர்மதி, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் ஆகியோர் பேசி உள்ளனர்.

இன்று கூட்டம்
இந்த நிலையில் இன்று அதிமுக தீர்மான குழு கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இன்னும் பல அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெயக்குமார்.. பொதுக்குழுவில் என்னென்ன விஷயங்களை ஆலோசனை செய்யலாம் என்று விவாதம் செய்தனர். என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்பது பற்றி இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனை
இந்த நிலையில் உள்ளே கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே.. ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வர போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டம் சரியாக அதே நேரத்தில் முடிந்தது. வெளியே ஓ.பி.எஸ்ஸை வரவேற்க கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த கூட்டத்தின் வழியே ஜெயக்குமார் வெளியேறினார்.

ஜெயக்குமார்
1 நிமிடம் மட்டும் இடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தீர்மானக்குழு கூட்டம் மீண்டும் 18ம் தேதி தொடர்ந்து நடக்கும். ஓபிஎஸ் வருகிறார் என்று வெளியேறவில்லை. ஓ.பன்னீர் செல்வதால் வருவதால் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொள்ளவில்லை. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஒற்றை தலைமை முறை செயல்பாட்டிற்கு வருமா.. வராதா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், என்றார்.

ஓ பன்னீர்செல்வம்
இதையடுத்து ஜெயக்குமார் தனது காரை எடுத்துக்கொண்டு சென்ற சில நிமிடங்களில் அங்கே ஓ பன்னீர்செல்வம் வந்தார். அவர் காரை ஸ்லோ செய்த நிலையில் மைக்கை நீக்கிய செய்தியாளர்கள் ஒற்றை தலைமை வருமா? பொதுக்குழுவில் நல்ல முடிவு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பினர். இதற்கு ஒரே ஒரு வார்த்தையில் பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம் "கிடைக்கும்" என்றார். ஆனால் தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பற்றி பதில் அளிக்க ஓ பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார்.

அதிமுக அலுவலகம்
முன்னதாக அதிமுக அலுவலகத்தில் இருந்து ஜெயக்குமாரின் கார் புறப்பட்டதும், அதன் மீது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு அவரை ஆபாசமான வார்த்தைகளை சொல்லி மோசமாக திட்டினார்கள். துரோகியே.. *****.. ஏய் காரை நிறுத்து என்று கூறி கடுமையான வார்த்தைக்களால் அவரை திட்டினர்.இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications