Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒன்னுமே இல்லையாம்.." 2 நாட்கள் நடந்த அமலாக்க துறை சோதனை.. அமைச்சர் துரைமுருகன் தந்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனை நேற்றிரவு தான் முடிந்திருந்தது. இதற்கிடையே அமலாக்கத் துறை சோதனை தொடர்பான கேள்விக்கு துரைமுருகன் சில முக்கிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் துரைமுருகன். திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன், இப்போது தமிழ்நாடு அமைச்சரவையில் நீர்ப் பாசனத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

durai murugan kathir anand dmk


இவரது மகன் கதிர் ஆனந்த், திமுக சார்பில் வேலூரில் லோக்சபா தேர்தலில் வென்று எம்பியாக இருக்கிறார். இதற்கிடையே நேற்று முன்தினம் திடீரென துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

சோதனையின் பின்னணி

கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது தான் கதிர் ஆனந்த் முதல்முறையாக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். வாக்குப்பதிவு சமயத்தில் துரை முருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரி துறையினர்சோதனை நடத்தினர். அதில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்புடைய வழக்கிலேயே அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியிருக்கிறது.

தாமதம்:

வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலையிலேயே அமலாக்கத் துறை சென்றுவிட்டனர். சிஆர்பிஎஃப் போலீசாரின் உதவியுடன் சென்ற அமலாக்கத் துறையினர் சோதனையைத் தொடங்க தயாரானார்கள். ஆனால், கதிர் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாதது அப்போது தான் தெரிய வந்தது. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்று இருந்ததால்.. ரெய்ட்டை உடனடியாக தொடங்க முடியாமல் போனது.


சுமார் 5 மணி நேரம் வரை அமலாக்கத் துறையினர் காத்திருந்த நிலையில், அதன் பின்னரே ரெய்டு சமயத்தில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்த விவரம் அடங்கிய மெயிலை கதிர் ஆனந்த் அனுப்பியிருக்கிறார். அதைத்தொடர்ந்தே சோதனை நடந்தது. 3ம் தேதி தொடங்கிய ரெய்டு நேற்றிரவு தான் முடிந்துள்ளது. அதேபோல கதிர் ஆனந்த்திற்கு சொந்தமான கல்லூரியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

துரைமுருகன்:

இந்த ரெய்டில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்கள் அமலாக்க துறை சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் பதிலளித்தார். இந்த ரெய்டு தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "வந்தாங்க, ஒன்னும் இல்லனு எழுதிக் கொடுத்துட்டு போய்டாங்க.." என்று தனது ஸ்டைலில் இரண்டே வரியில் பதிலளித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கத்தி, கடப்பாரை

முன்னதாக நேற்றைய தினம் சோதனையின் போது கதிர் ஆனந்த் வீட்டுக்குக் கடப்பாரை, கத்தி, உளி உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு இரு கதவுகள் மூடப்பட்டு இருந்தன. அதற்கான சாவி அங்கே இல்லை.. உள்ளே ரூமில் எதாவது முக்கியமான பொருட்கள் அல்லது ஆவணங்கள் இருக்கும் என்று சந்தேகித்த அதிகாரிகள், 2 கதவுகளை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். கத்தி கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை வைத்து கதவை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+