Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒதுக்குப்புறத்தில் நிர்வாணம்.. மொத்தம் 9 பேர் செய்த காரியம்.. சிதறி விழுந்த தலைகள்.. ஆடிப்போன ஆவடி

இரட்டை கொலையில் 9 பேர் சென்னையில் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தலைநகரில் இரட்டை கொலை நடந்த அதிர்ச்சியில் இருந்து சென்னைவாசிகள் இன்னும் வெளியே வரவில்லை.. அப்படி என்னதான் நடந்தது?

சென்னை ஆவடியை சேர்ந்தவர் சுந்தர்.. 29 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்... மனைவி பெயர் பிரியா.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இதே ஆவடியில் நேரு பஜார் மசூதிக்கு பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு மீன்கடையில் வேலை பார்த்து வருகிறார்..

 அசாருதீன்

அசாருதீன்

மனைவி கவுசிக் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சுந்தர், அசாருதீன் 2 பேருமே நெருங்கிய நண்பர்கள்.. இந்நிலையில், கடந்த 12ந்தேதி இரவு ஆவடியில் உள்ள ஓசிஎப் மைதானத்தில் இந்த நண்பர்கள் இருவருமே கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.. தலை வெட்டப்பட்டிருந்தது.. முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது..

 கூலிப்படை

கூலிப்படை

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் மணிகண்டன் என்ற ஆட்டோ டிரைவர் சிக்கினார்.. இவரும் அதே ஆவடியை சேர்ந்தவர்தான்.. கூலிப்படையை வைத்து இந்த இரட்டை கொலையை செய்தது தெரியவந்தது.. இதையடுத்து, மணிகண்டனிடம் விசாரணை ஆரம்பமானது. மணிகண்டன் ஒரு கிரிமினலாம்.. கஞ்சா கடத்தி வந்துள்ளார்.. இதற்காக 4 வருடங்களுக்கு முன்பு கைதாகி ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார்.. பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு பெண்ணும் உள்ளனர்..

 கள்ள தொடர்பு

கள்ள தொடர்பு

ஆனால் பிரிசில்லாவுக்கு ஜெகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடனேயே சென்றுவிட்டார்.. இதனால் மணிகண்டன் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.. இதனிடையே, பிரிசில்லாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் ஜெகன் தவித்து வந்துள்ளார்.. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தபோதுதான், கடந்த 4ந்தேதி மணிகண்டனை ஆட்டோவில் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று, சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜெகன்..

 நிர்வாணம்

நிர்வாணம்

தன்னிடம் பணம் இல்லை என்று மணிகண்டன் சொல்லவும், அப்படியானால் ஆந்திராவில் இருந்து 2கிலோ கஞ்சா வாங்கி வந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இதற்கும் மணிகண்டன் மறுப்பு சொல்லவும், மணிகண்டனை நிர்வாணப்படுத்தி ஜெகன் வீடியோ எடுத்துவிட்டார்.. இப்போது கஞ்சா, பணம் இரண்டுமே வேண்டும், இல்லாவிட்டால் நிர்வாண வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதாக மிரட்டினார்.. வேறு வழி தெரியாத மணிகண்டன் 10 நாள் டைம் கேட்கவும், ஜெகனும் அவரை விடுவித்தார்..

 நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

தன் மனைவியையும் அபகரித்து கொண்டு, இப்படி நிர்வாண வீடியோ எடுத்தும் மிரட்டும் ஜெகன்மீது மணிகண்டனுக்கு ஆத்திரம் அதிகமானது.. அதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.. இதற்காகவே, கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார்.. கூலிப்படையினர் மொத்தம் 8 பேராம்.. சம்பவத்தன்று மைதானத்துக்கு ஜெகன் தன்னுடைய நண்பர்கள் சுந்தர், அசாருதீனுடன் சென்றுள்ளார்.. ஜெகனை கொலை செய்ய முயன்றபோது, சுந்தர், அசாருதீன் இருவரும் கூலிப்படையினரை தடுக்க முயன்றனர்..

 சிறுவன் யார்?

சிறுவன் யார்?

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், சுந்தர், அசாருதீன் இருவரையுமே வெட்டி கொலை செய்தது.. ஆனால், யாரை கொல்ல வேண்டும் என்று இவ்வளவு முயற்சியும் நடந்ததோ, அந்த ஜெகன் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, போலீசார் மணிகண்டன் உட்பட மொத்த கும்பலையும் கைது செய்தனர்.. 9 பேர் தவிர ஒரு சிறுவனும் இந்த கொலை வழக்கில் கைதாகி உள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. இரட்டை கொலை நடந்து, வெறும் 24 மணி நேரத்தில் நம் போலீசார் குற்றவாளிகளை உள்ளே தூக்கி வைத்துள்ளனர்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+