பரமக்குடியில் கால் காயத்திற்கு ஊசி போட்டவர்.. இன்று உயிருடன் இல்லை.. என்ன நடந்தது?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தை சேர்ந்த பில்லத்தியான் என்ற கூலி தொழிலாளி தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக, பரமக்குடியில் இளையான்குடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். அதற்காக நர்சு ஒருவரிடம் ஊசி போட்டுள்ளார். இன்று அவர் உயிருடன் இல்லை.. இதனால் அவருடைய உறவினர்கள் மொத்த சாலையையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் பில்லத்தியான் என்பவர் கூலி தொழிலாளி ஆகும். இவருக்கு திருமணமாகி ராமலெட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பில்லத்தியானுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக, பரமக்குடியில் இளையான்குடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல சிகிச்சை பெறுவதற்காக அங்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் அவருக்கு ஊசி போட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் திடீரென மயங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி பரமக்குடியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உடனடியாக பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.
உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, பில்லத்தியான் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சாலை மறியல்
இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் ஊசி போட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பரமக்குடி போலீசார் விசாரணை
இது குறித்து பரமக்குடி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பில்லத்தியான் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications