Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்றத்தூர் அரசு பள்ளி வகுப்பறையில் இப்படியா ஆகணும்.. மாணவன் வெங்கடேசனுக்கு என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணன் என்பவருடைய மகன் வெங்கடேசன். வெங்கடேசன் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.. காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளார் மாணவர் வெங்கடேசன். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத அந்த சம்பவம் வகுப்பறையிலேயே நடந்தது. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன் என்பவருடைய மகன் வெங்கடேசனுக்கு 16 வயது ஆகிறது. இவர் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து கடந்த அக்டோபர் 6ம் தேதி பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்கள்.'

What happened to Venkatesan a 11th grade student in the kundrathur school classroom

அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மாணவனின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததும், பள்ளிக்கு செல்லும் நாளில் தலைவலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்து இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் அருகே இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் புவனேஸ்வரிக்கு 17 வயது ஆகிறது. புவனேஸ்வரி உடுமலை பாபுகான் வீதியில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகிறார். விடுதியில் தங்கியபடி, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+