குன்றத்தூர் அரசு பள்ளி வகுப்பறையில் இப்படியா ஆகணும்.. மாணவன் வெங்கடேசனுக்கு என்ன நடந்தது?
சென்னை: குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்த சரவணன் என்பவருடைய மகன் வெங்கடேசன். வெங்கடேசன் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.. காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளார் மாணவர் வெங்கடேசன். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத அந்த சம்பவம் வகுப்பறையிலேயே நடந்தது. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன் என்பவருடைய மகன் வெங்கடேசனுக்கு 16 வயது ஆகிறது. இவர் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து கடந்த அக்டோபர் 6ம் தேதி பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்கள்.'

அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மாணவனின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிக அளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததும், பள்ளிக்கு செல்லும் நாளில் தலைவலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்து இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கல்லாபுரம் அருகே இந்திராபுதுநகர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் புவனேஸ்வரிக்கு 17 வயது ஆகிறது. புவனேஸ்வரி உடுமலை பாபுகான் வீதியில் உள்ள பெண்கள் சமூக நல விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகிறார். விடுதியில் தங்கியபடி, உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications