கவனம் மக்களே! கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கண்ணுக்கே தெரியாத பிரச்சனை இதுதான்-உஷார்
சென்னை: ‛கிரெடிட் கார்டு' குறித்த விபரங்களை தெரியாமல் பலரும் அதனை வாங்கி கொள்கின்றனர். குறிப்பாக ‛கிரெடிட் கார்டு' வாங்கிவிட்டேன். ஆனால் நான் அதனை பயன்படுத்துவது கூட இல்லை என பலரும் பெருமை பேசுகின்றனர். இப்படி கூறுவோர் ‛அலர்ட்' ஆகி உடனே தங்களின் கிரெடிட் கார்டு குறித்த விபரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்புள்ளது.
கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தால் என்ன சிக்கல் வரும் என நீங்கள் கேட்கிறீர்களா? அப்போது உங்களுக்கு தான் இந்த செய்தி. தொடர்ந்து படியுங்கள். கிரெடிட் கார்டு குறித்த விபரங்களை அறிந்து அதனால் நமக்கு ஏற்படும் தேவையில்லாத நிதிச்சுமையில் இருந்து எளிமையாக தப்பித்து கொள்ளலாம்.

கிரெடிட் கார்டு.. வரமா? சாபமா?. இந்த கேள்வி பலருக்கும் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் கிரெடிட் கார்டால் நன்மைகள் இருந்தாலும் கூடவே பிரச்சனைகளும் உள்ளன. இதனால் கிரெடிட் கார்டை பயன்படுத்த விரும்புவோர் அதனை பற்றிய விபரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நிறையபேர் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிரெடிட் கார்டு வழங்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. இதனாலேயே பலரும் கிரெடிட் கார்டு வாங்கி கொள்கின்றனர். இவ்வாறு கிரெடிட் கார்டு பெறுவோரில் பெரும்பாலானவர்கள் மாத கடைசியில் தங்களின் கையிருப்பு பணம் கரைந்த பிறகு பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்பிறகு கிரெடிட் கார்டுக்கான தொகையை அவர்கள் செலுத்தி விடுகின்றனர். இந்த கிரெடிட் கார்டு பில்லை உரிய காலத்தில் செலுத்த தவறும் பட்சத்தில் வட்டி உருவாகும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் அதற்கான பில்லை சரியாக கட்டி விட வேண்டும். இது ஒருதரப்பு மக்கள் என்றால் இன்னொரு தரப்பினர் வேறு விதமாக உள்ளனர்.
அதாவது இந்த வகை மக்களுக்கு கிரெடிட் கார்டு வாங்க விருப்பம் இருக்காது. ஆனால் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் தொடர் நச்சரிப்பு உள்ளிட்டவற்றாலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் என்ன செய்வது? என சிலர் கிரெடிட் கார்டை வாங்கியிருப்பார்கள். இவர்கள் அந்த கார்டை பயன்படுத்தி இருக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலர் அந்த கிரெடிட் கார்டை வாங்கி வீட்டில் வைத்திருப்பதோடு சரி அதனை எங்கேயும் எடுத்து சென்றிருக்க மாட்டார்கள்.
இவ்வாறு கிரெடிட் கார்டை வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்போர் என்னிடமும் கிரெடிட் கார்டு உள்ளது. ஆனால் நான் ஒருநாள் கூட பயன்படுத்தியது இல்லை என சிரித்தபடி பெருமையாக பேசுவது உண்டு. இப்படிப்பட்டவர்களும் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. அதாவது நீண்டகாலமாக கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட ஆண்டுதோறும் ஏஎம்சி என்ற பெயரில் கிரெடிட் கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
நாம் கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருக்கும்போது இந்த கட்டணம் பற்றி நாம் கவலை கொள்வது இல்லை. இதனால் பலரும் அந்த கட்டணத்தை செலுத்துவது இல்லை. இதனால் கிரெடிட் கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணத்துக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு நாள் திடீரென நாம் பார்த்தால் அது மிகப்பெரிய தொகையில் போய் நிற்கலாம். அதோடு இந்த பிரச்சனை என்பது கிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.
இதனால் கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனங்களை தொடர்டு கொண்டு அதன் செயல்பாட்டை நிறுத்துங்கள். மேலும் என்ஓசி எனும் தடையில்லா சான்று வாங்கி வைத்து கொள்ளுங்கள். மேலும் வங்கி, நிதி நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து போன் செய்து கிரெடிட் கார்டு ஆபர் செய்கிறோம் என கூறினால் அதுபற்றிய விபரங்களை நன்கு கேட்டறிந்த பிறகு தேவை என்றால் மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.
இல்லாவிட்டால் கிரெடிட் கார்டு தேவையில்லை என்றே நேரடியாக கூறிவிடுங்கள். மாறாக கிரெடிட் கார்டு வாங்கி வைத்து கொண்டு பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது பணம் தான் வீணாக செலவழியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications