"பாஜகவில் சேருங்க.." செந்தில் பாலாஜியிடம் ED கேட்டதாக சொன்ன கபில் சிபல்! அமலாக்க துறை ரியாக்ஷன் என்ன
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று கபில் சிபல் சில பரபர வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு அமலாக்கத் துறை அளித்த பதில் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது.

இந்த விவகாரத்தில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல களேபரங்கள் அரங்கேறின. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய நிலையில், அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி: அன்றிரவு இரவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். மேலும், அமலாக்கத் துறையினர் அவரை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் சில பரபர வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முந்தையது என்ற சொன்ன கபில் சிபல், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கபில் சிபல்: மேலும், கடந்த 9 ஆண்டுகளில் செந்தில் பாலாஜி வருமான வரியைத் தாக்கல் செய்துள்ள நிலையில், சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் இருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை என்றும் அரசு வேலைக்காக யாரும் செந்தில் பாலாஜியிடம் நேரடியாகப் பணம் தரவில்லை என்றும் வாதிட்டார்.
அதன் பிறகு கபில் சிபல் நீதிமன்றத்தில் சொன்னது தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அதாவது விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம், "நீங்கள் ஏன் பாஜகவில் சேரக் கூடாது" என்று அமலாக்கத் துறை கேட்டதாகப் பரபர வாதத்தை கபில் சிபல் முன்வைத்தார். இது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இதற்கு நீதிமன்றத்திலேயே அமலாக்கத்துறை சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அமலாக்க துறை: அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இது முழுக்க முழுக்க அப்பட்டமான பொய். எந்த சமயத்திலும் அமலாக்கத் துறையில் இருந்து யாரும் அவரிடம் இப்படிக் கேட்கவில்லை.. செந்தில் பாலாஜி இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. வேறு எந்தவொரு வலுவான வாதங்களும் இல்லாத நிலையில், எப்படியாவது ஜாமீன் பெற்றாக வேண்டும் என்பதற்காக இதுபோல பொய்யான வாதங்களைச் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர்" என்று கூறினர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications