9.51க்கே டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக குடிமகன்கள் புகார்.. விடிய விடிய மதுவிற்பனை நடப்பதாக புகார்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 9.51க்கே மூடப்படுவதாக அந்த பகுதி குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கள்ளத்தனமாக பார்களில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இதேபோல் திண்டுக்கலில் பூட்டிய கடையை திறந்து மது விற்பனை நடப்பதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.
திண்டுக்கல் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் நந்தவனம் சாலை பகுதியில் இயங்கி வரும் 3130 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடையில் இரவு 10 மணிக்கு மேல் கடை மூடப்பட்ட பிறகு அருகில் உள்ள கதவு வழியாக தொடர்ந்து மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்ட போதும் அசராது கள்ளச் சந்தையில் மதுவிற்கும் மாபியாக்கள் பூட்டிய கடையை திறந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை எடுத்து பக்கத்தில் உள்ள அறைக்கு கொண்டு மது விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

இது ஒருபுறம் எனில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடைகளை 10 மணிக்கு அடைப்பதற்கு பதில் 9.51க்கு அடைத்துவிட்டு கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக குடிமகன்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த பகுதியில் போலீசார் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பதை தடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் அந்த பகுதியை குடிமகன்கள் பகலிலேயே திறந்தவெளி பார் போல் பயன்படுத்துவதால், பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதேபோல் கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும், இந்த விவகாரத்தில் பெயரளவில் தான் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பாட்டிலை திரும்ப ஒப்படைப்பதற்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு வழக்கம் போல் கூடுதலாக 10 ரூபாய் என 20 ரூபாய் வரை டாஸ்மாக் கடைகளில் வசூலிப்பதாகவும், யாராவது பிரச்சனை செய்து வீடியோ எடுத்தால், அவர்களுக்கு மட்டும் சில நேரங்களில் 10 ரூபாய் திரும்ப தரப்படுவதாகவும் சில குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?














Click it and Unblock the Notifications