Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9.51க்கே டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக குடிமகன்கள் புகார்.. விடிய விடிய மதுவிற்பனை நடப்பதாக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 9.51க்கே மூடப்படுவதாக அந்த பகுதி குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கள்ளத்தனமாக பார்களில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இதேபோல் திண்டுக்கலில் பூட்டிய கடையை திறந்து மது விற்பனை நடப்பதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.

திண்டுக்கல் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் நந்தவனம் சாலை பகுதியில் இயங்கி வரும் 3130 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடையில் இரவு 10 மணிக்கு மேல் கடை மூடப்பட்ட பிறகு அருகில் உள்ள கதவு வழியாக தொடர்ந்து மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரும் காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்ட போதும் அசராது கள்ளச் சந்தையில் மதுவிற்கும் மாபியாக்கள் பூட்டிய கடையை திறந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை எடுத்து பக்கத்தில் உள்ள அறைக்கு கொண்டு மது விற்பனையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

What is happening at the TASMAC bar in Maraimalai Nagar Chengalpattu district

இது ஒருபுறம் எனில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடைகளை 10 மணிக்கு அடைப்பதற்கு பதில் 9.51க்கு அடைத்துவிட்டு கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக குடிமகன்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்

இந்த பகுதியில் போலீசார் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பதை தடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் அந்த பகுதியை குடிமகன்கள் பகலிலேயே திறந்தவெளி பார் போல் பயன்படுத்துவதால், பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம்
வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம்

அதேபோல் கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும், இந்த விவகாரத்தில் பெயரளவில் தான் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பாட்டிலை திரும்ப ஒப்படைப்பதற்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு வழக்கம் போல் கூடுதலாக 10 ரூபாய் என 20 ரூபாய் வரை டாஸ்மாக் கடைகளில் வசூலிப்பதாகவும், யாராவது பிரச்சனை செய்து வீடியோ எடுத்தால், அவர்களுக்கு மட்டும் சில நேரங்களில் 10 ரூபாய் திரும்ப தரப்படுவதாகவும் சில குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+