வந்தே பாரத்தில் மட்டுமே கவாச் கருவி? தமிழ்நாட்டு ரயில்களில் இல்லையா.. ரயில்வே ஊழியர் சங்கம் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள ரயில்களில் எத்தனை ரயில்களில் கவாச் சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரயில்வே ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாசம் விளக்கம் அளித்தார்.

கவாச் கருவியை பொறுத்தவரை அரை கிலோ மீட்டருக்கு முன்பே ஆட்டோமேட்டிக்காக பிரேக் போட்டு நின்றுவிடும். சென்னை கோரமண்டல் ரயில் வந்து கொண்டிருக்கிறது. அதே டிராக்கில் இன்னொரு ரயில் வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு ரயில்களிலும் கவாச் கருவி பொருத்தியிருந்தால் , இந்நேரம் ஆட்டோமேட்டிக்காக ரயில்கள் ஒரு கிலோ மீட்டர் முதல் அரை கிலோ மீட்டர் தூரத்தில் நின்று இருக்கும்.

what is kavach in indian railways? is this available or not in tamilnadu trains ?

அந்த கவாச் கருவியை ஒரு லிமிட்டில் இரண்டு மூன்று செக்சனில் தான் பொறுத்தி இருக்கிறார்கள். எல்லா செக்சனிலும் உள்ள என்ஜினுக்கும் பொறுத்தவில்லை. இதேபோல் tpws என்று அழைக்கப்படும் train protection warning system, ஆக்சிலரி வார்னிங் சிஸ்டம் என பல விஷயங்கள் 15 வருடங்களில் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது.இவை எல்லா இடங்களிலும் பொறுத்தப்படவில்லை.

இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தண்டவாளங்கள் இருக்கின்றன. இதில் 1000 முதல் 2000 கிலோ மீட்டருக்குத்தான் பொருத்தி இருக்கிறார்கள். அதனால் மீதம் இருக்கும் தூரத்திற்கும் பொறுத்தவேண்டும் என்று எங்கள் தொழிற்சங்கம் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 3.75 லட்சம் காலியிடங்கள் ரயில்வேயில் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் ரயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காலியிடங்கள். இவை இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது. லோகோ பைலட், ஸ்டேசன் மாஸ்டர், கார்டு, டெக்னீசியன், சூப்பர்வைசர் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார்.

இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள ரயில்களில் எத்தனை ரயில்களில் கவாச் சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூர்ய பிரகாசம், தமிழ்நாட்டில் உள்ள ரயில்களில் அப்படி கவாச் சிஸ்டம் பொறுத்தப்பட்டதாக தகவல்கள் இல்லை. வந்தே பாரத் ரயில்களில் மட்டும் கவாச் சிஸ்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதேநேரம் கும்மிடிப்பூண்டி செக்சினில் ஓடும் சில ரயில்களில் மட்டும் tpws என்று அழைக்கப்படும் train protection warning system பொருத்தப்பட்டு இருக்கிறது. அக்சிலரி வார்னிங் சிஸ்டம் போன்றவை பரிசோதனை அடிப்படையில் சில இடங்களில் பொறுத்தப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பொறுத்தப்படவில்லை. பொறுத்தப்பட்ட இடங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. 95 சதவீதம் இடங்களில் இதுபோன்று விபத்துக்களை தடுக்கும் சிஸ்டத்தை பொருத்தியதாக எங்களுக்கு தகவல் இல்லை என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+