Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நந்தி மலையில் தொடங்கும் தென்பெண்ணை.. "தமிழகம் vs கர்நாடகா.." மற்றொரு நீண்ட சட்ட போராட்ட வரலாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கும் கர்நாடகா மாநிலத்திற்கும் காவிரியைப் போலவே தென்பெண்ணை நதி நீரைப் பகிர்வதிலும் பிரச்சனை இருக்கிறது. தென்பெண்ணை துணை நதி ஒன்றில் கர்நாடகா அணை கட்டியதே இதற்குக் காரணமாகும். காவிரி பிரச்சனை குறித்து பலருக்கும் தெரியும். ஆனால் இந்த தென்பெண்ணை பிரச்சனை பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீரைப் போலவே தென்பெண்ணை நதியின் நீர் தொடர்பாகவும் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

What is the real issue between Tamil nadu and Karnataka on Thenpennai river dispute explained

எங்கு உருவாகிறது

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தின் சிக்கபள்ளாப்பூர் (Chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி மலைத் தொடரின் அமைந்துள்ள சென்னகேசவா மலை (Chenna Kesava hills) உற்பத்தியாகிறது. தென்பெண்ணை ஆற்றை கர்நாடகாவில் "தட்சிண பினாகினி" என்று அழைக்கிறார்கள். இந்த ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் வழியாகச் சுமார் 432 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

முதலில் நந்தி மலையில் உற்பத்தியாகும் இந்த மலைத்தொடர் இந்த ஆறு கர்நாடகாவில் 112 கிமீ பாய்கிறது. பிறகு அது கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகத் தமிழகத்தில் நுழைகிறது. பின்னர் தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக அந்த நதி பாய்கிறது.. தமிழகத்தில் மட்டும் இந்த நதி மொத்தம் 318 கிமீ தூரம் பாய்கிறது. இறுதியாக கடலூரில் தென்பெண்ணை ஆறு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த ஆறுதான் வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணை மற்றும் சாத்தனூர் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிக முக்கியமான அணைகளாகும்.

குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைத் தாண்டி, இந்த ஆற்றின் கிளை நதிகளான சினையாறு, பாம்பாறு மற்றும் மார்க்கண்டேய நதி ஆகியவையும் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆகியவை இதன் முக்கிய துணை ஆறுகளாகும். பெரும்பாலும் இந்த நதி விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக தென்பெண்ணை விளங்குகிறது.

What is the real issue between Tamil nadu and Karnataka on Thenpennai river dispute explained

சிக்கல் என்ன

இந்த தென்பெண்ணை ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீண்டகாலச் சிக்கல் நிலவி வருகிறது. தென் பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டியதே இரு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் சிக்கலுக்குப் பிரதானக் காரணமாகும்.

1892ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, தமிழகத்தின் அனுமதியின்றி மாநிலமான கர்நாடகா புதிய அணைகளையோ அல்லது நீரைத் திசைதிருப்பும் கட்டுமானங்களையோ கட்டக்கூடாது. 1892 ஒப்பந்தம் இதை மிகத் தெளிவாகக் கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறி மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணையைக் கட்டியுள்ளது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பது தமிழகத்தின் வாதமாக இருக்கிறது.

நீதிமன்ற உத்தரவு

கடந்த 2018ல் தமிழ்நாடு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால் காவிரி விவகாரத்தைப் போலவே, தென்பெண்ணை நதியின் பிரச்சினையை கையா தனியாக ஒரு 'நதிநீர் தீர்ப்பாயம்' (River Water Tribunal) அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்து. அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+