சித்ரா மரணத்துக்கு "இது"தான் காரணமா.. கசியும் பரபரப்பு தகவல்.. அதிரடி விசாரணையில் குதித்த போலீஸ்
நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணங்கள் வெளியாகி வருகின்றன
சென்னை: நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், அதுசம்பந்தமாக பல்வேறு யூகங்களும், காரணங்களும் வெளிவந்தபடியே உள்ளன.
தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் நடிகை சித்ரா ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.. அந்த ஹோட்டலில் இருந்துதான் ஷூட்டிங்கிற்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நடுராத்திரி சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்க செல்வதாகவும், அதனால் வெளியே செல்ல சொன்னதாகவும் தெரிகிறது.
சித்ரா
பிறகு, வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும், கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள ஃபேனில் தன் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. சித்ராவின் கன்னத்தில் உள்ள காயங்கள் பலவித சந்தேகங்களை தருகிறது.
சக நடிகர்
ராத்திரி நேரத்தில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டது குழப்பத்தை தருகிறது.. இதனிடையே மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. தான் நடிக்கும் சீரியலில் சக நடிகர் ஒருவருடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம். இதில் சித்ரா நடிக்க போகவும்தான், அதுவே பிரச்சனையாக வெடித்துள்ளதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமாக ஹேமந்த் சித்ராவுக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.
சர்வ சாதாரணம்
நேற்றிரவும் இருவருக்கும் அதே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது... இதன் விளைவாகவே, சித்ரா தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்... எனினும் இந்த காரணத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை.. முத்த காட்சி என்பது சர்வசாதாரணமாக சினிமா, சீரியலில் நடக்கக்கூடிய நிகழ்வு.. இதையெல்லாம் யதார்த்தமாக பார்க்கும் மனோபாவம் தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுவிட்ட நிலையில், இதுவெல்லாம் ஒரு பஞ்சாயத்தாக இருவருக்கும் நடந்திருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தகராறு
அதுமட்டுமல்ல, இவர்கள் ரூமுக்கு வந்ததே நள்ளிரவு 2.30 மணிக்கு என்கிறார்கள்.. 3 மணிக்கு சித்ராவின் தற்கொலை நடந்துள்ளது.. இடைப்பட்ட அரை மணி நேரத்தில் தகராறு முற்றியிருக்குமா? அல்லது ஏற்கனவே நடந்த தகராறினால் மனம் உடைந்து சித்ரா தற்கொலை முடிவை எடுத்தாரா? என்று தெரியவில்லை.
காரணம்
இப்படி சித்ரா மரணத்தில் நிமிடத்துக்கு நிமிடம் ஒவ்வொரு காரணங்கள் வெளியாகி வந்தாலும், விசாரணையின் முடிவில் தான் உண்மையான மற்றும் முழுமையான காரணம் என்னவென்று தெரியும். ஆனால், தம்பதிதக்குள் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி சண்டை வந்ததாக அக்கம்பக்கத்தினரும் போலீசில் தெரிவித்துள்ளனராம்!