Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைகீழா மாறிட்டாரே "தலை".. பாஜக சீனியர்களுக்கு விழுந்த "இடி".. கப்சிப் மோடுக்கே போயிட்டாராமே.. நிஜமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பரபரப்புகள் சூடுபிடித்திருக்கும் சூழலில், கமலாலயமே கப்சிப் மோடுக்கு போய்விட்டதாக சொல்கிறார்கள்.. என்னவா இருக்கும்?

எம்பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி இன்னும் எந்த கட்சியிலும் முடிவாகவில்லை.. திமுக மட்டுமே, அதே பெரும்பான்மையான கட்சிகளுடன், வலுவாக உள்ளது.. அதேசமயம், உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை.

What is the reason for Big Silent in Tamil Nadu BJP and Dissatisfaction against Sr Leader PL Santhosh

அதிமுகவில் நிலைமை தலைகீழாக உள்ளது.. என்ன நினைத்து எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி உறவை முறித்து கொண்டாரோ, அதற்கான போதுமான பலன் கிட்டவில்லை. அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் முயற்சிக்கவில்லை.. மெகா கூட்டணியை உருவாக்க போவதாக, எடப்பாடி அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில், அதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

பாஜக: அதிமுகவே இப்படியென்றால், பாஜக நிலைமை அதற்கு மேல் உள்ளது.. 5 மாநில தேர்தல் பிஸியில் மேலிட தலைவர்கள் இருந்ததால், தமிழகத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்தும்கூட, தமிழக அரசியல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கவில்லை என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், அந்த "தலை"யின் பெருத்த அமைதி பலவித சந்தேகத்தை கிளப்பி வருகிறதாம்.

மழை வெள்ளம், நிவாரணத்தொகை உள்ளிட்ட விவகாரங்களில், தமிழக அரசு மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார் என்றாலும், முன்புபோல் திமுக மீது பரபரப்பை கிளப்புவதில்லையாம்..

சாந்தம் : வழக்கமாக, திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க, தனக்கு கையில் கிடைத்த ஆதாரங்களை செய்தியாளர் கூட்டத்தில் அம்பலப்படுத்தி வந்தவர், தற்போது சாந்தமான மோடுக்கு சென்றுவிட்டாராம்.

கூட்டணி முறிவுக்குபிறகு, அதிமுக குறித்தோ அல்லது எடப்பாடி பழனிசாமி குறித்தோ பேச்சையே எடுக்காமல் இருந்தவர், தற்போது திமுக மீதும் அவ்வளவாக பாயாமல் இருக்கிறாராம். இந்த திடீர் அமைதிக்கு என்ன காரணம்? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், தன்னுடைய அரசியல் குரு பி.எல்.சந்தோஷூக்கு நாலாபக்கமும் எழும் அதிருப்திகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்..

பாஜக: அதாவது, கர்நாடகா பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் விஜயேந்திரா, தன்னுடைய மாநில அரசியலுக்குள் சந்தோஷ் நுழையவே கூடாது. ஒரு கவுன்சிலரிடம் கூட அவர் பேசக் கூடாது என்று தடை போட்டுள்ளதை, சொந்த கட்சியினரே எதிர்பார்க்கவில்லையாம்.. சந்தோஷ் விவகாரம் மிகுந்த அதிர்வலையை பாஜகவுக்குள் ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு சீனியரான தேஜஸ்வி சூர்யாவும், கர்நாடகா அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

பிஎல் சந்தோஷ், தேஜஸ்வி சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என்று அதிர்ந்து போயுள்ளதாம் தமிழக கமலாலயம்.. அதனால்தான், தற்போதைய நிகழ்வுகளில் ஐடி விங் நபர்களை முன்புபோல் களமிறக்காமல், "அமைதி" அரசியலை கையில் எடுத்துள்ளாராம் "தலை".

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+