விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது ஏன்? வந்து விழுந்த கேள்வி.. மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபர பதில்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விளக்கமளித்துள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த டிச.28ஆம் தேதி காலமானார். இது தமிழகம் முழுக்க இருந்த விஜயகாந்த் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பல ஆயிரம் மக்கள் சென்னையில் குவிந்தனர்.

அதேபோல மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த்: இதற்கிடையே இந்தியாவில் மிகவும் உயரிய விருதான பத்ம பூஷன் விருது விஜயகாந்த்திற்கு அறிவிக்கப்பட்டது. நமது நாட்டை பொறுத்தவரைப் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்படும். இதற்கிடையே குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்குப் பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இருப்பினும், விஜயகாந்த் மனைவியும் தேமுதி பொது செயலாளருமான பிரேமலதா நன்றி தெரிவித்தார். அதேநேரம் விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே இந்த விருதைக் கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதை வாங்கியிருப்போம் என்றும் விஜயகாந்த்திற்குக் காலம் கடந்து பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
மத்திய இணை அமைச்சர் எல் முருகன்: இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பத்மபூஷன் விருது விஜயகாந்த்திற்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கினார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல் முருகன் கூறுகையில், "விஜயகாந்த் மீது பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் அன்பு இருக்கிறது. தலைசிறந்த போலீஸ் அதிகாரியாக.. நேர்மையான அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் நடித்துள்ளார்.
விருது எதற்காக: விஜயகாந்த்தின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்குப் பத்ம பூஷன் விருதை வழங்குகிறது. அவரது சேவையைக் கவுரவிக்கும் வகையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சேவையாற்றிய அவரது உடலுக்கு அஞ்சி செலுத்தியுள்ளேன்" என்றார்.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
‘நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்போம்’ கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு., கிலியில் எடப்பாடி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications