விஜயகாந்துக்கு என்ன நடந்தது? மரணத்தில் மர்மம் இருக்கு.. மகன் முன்பே பகீர் கிளப்பிய மன்சூர் அலிகான்
சென்னை: விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் கடந்த மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில்தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், விஜய், அஜித், ஜெய்ரவி, கமல், நாசர், நடிகைகள் தேவயானி உள்ளிட்டோர் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரவர் விஜயகாந்த் குறித்து தங்களுக்கு தெரிந்த கருத்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு நல்ல நண்பராக மாறினார். அவர் வீட்டு திருமணத்திற்கு கூட விஜயகாந்த் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அது போல் கேப்டன் இறந்தவுடன் கவலை தோய்ந்த முகத்துடன் அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தை விட்டு எங்கும் செல்லாமல் நீண்ட நேரமாக இருந்தவர் மன்சூர் அலிகான்.
அப்படிப்பட்ட அவர் பேசுகையில் விஜயகாந்த் நிஜத்திலுமே மாமனிதனாக வாழ்ந்தவர். கேப்டன் உடல்நலம் மோசமான போதே நானெல்லாம் செத்து போய்ட்டேன். விஜயகாந்த் உடல்நலம் மோசமானதுக்கு என்ன ட்ரீட்மென்ட், என்ன ஏதுன்னு எந்த விவரமும் சொல்லப்படலை.
அதுல சில மன வருத்தங்கள் எனக்கு இருக்கின்றன. அதை பற்றி நான் இங்க பேசலை. ஆனால் என்னால் தாங்க முடியவில்லை. அத்தனை வேதனையா இருக்கு என தெரிவித்திருந்தார். இது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாகியது. விஜயகாந்தின் மகன்களும் மனைவியும் அவரை கண்ணுக்குள் வைத்து பார்த்து க் கொண்ட நிலையிலும் அவர் குறித்து இப்படி பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications