ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு? வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் சக்கரபாணி தந்த விளக்கம்
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்குப் பற்றாக்குறை எழுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும், ஆயில், மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு டைப் ரேன் அட்டைக்கும் குறிப்பிட்ட அளவு இவை வழங்கப்படும்.
இதனிடையே தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்குப் பற்றாக்குறை எழுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி: தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 15 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படுகிறது. இது குறித்து நாங்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல கோதுமையை நேரடியாக நாமே கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி தர வேண்டும். அப்படி அனுமதித்தால், நமது கோதுமை தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். 2021 திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் சுமார் 7500 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை இப்போது 2,712 கிலோ லிட்டராக குறைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தட்டுப்பாடு: மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்குமாறு நாங்கள் இரண்டு முறை கடிதம் எழுதிவிட்டோம். இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து உரியப் பதில் வரவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்கள் மண்ணெண்ணெய் வைத்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் மத்திய அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டுக்குக் குறைத்துள்ளது வேதனை தருகிறது. ஆனால், பொதுமக்களுக்கு ஏதோ தமிழக அரசு மண்ணெண்ணெய் வழங்குவதைக் குறைத்து விட்டதாகத் தோற்றம் ஏற்பட்டுள்ளது.7000 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை 2012 லிட்டராக குறைத்துள்ளனர். இப்போது நமக்கு 9 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கிறது. ஆனால், தேவைக்கு ஏற்ப மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கப்படுவதில்லை. இது குறித்து மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

அரிசி கொள்முதல்: திமுக அரசு பொறுப்பேற்ற போது, 376 நெல் அறவை ஆலைகளாக இருந்ததை 747 ஆலைகளாக உயர்த்தியுள்ளது. அங்கே இருக்கும் ஆலைகளுக்குத் தகுந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டு கருப்பு, பழுப்பு இல்லாத அரிசியைக் கொள்முதல் செய்கிறோம். குடோனுக்கு வரும் உரியச் சோதனை செய்யப்பட்டே அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. 2020 - 2021ஆம் ஆண்டில் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
2021- 2022இல் 43 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது வரை 35 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளோம். இந்தாண்டு ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும். அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications