பார்க்க வரட்டுமா அம்மா? நன்றி மறக்காத விஜயசாந்தி.. சசிகலா சொன்ன "மெகா பிளான்".. பரபர பின்னணி!
சென்னை: சமீபத்தில் விஜய சாந்தியை சந்தித்த சசிகலா பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தஞ்சாவூர் மாணவி மரணத்தின் உண்மை பிண்ணனிகளை அறிந்து கொள்ள பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், நடிகை விஜயசாந்தியும் இடம் பெற்றிருந்தார். அந்த விசாரணைக் குழு தஞ்சை சென்று விசாரித்தது.
அதனையடுத்து சென்னைக்கு வந்தார் விஜயசாந்தி. ஆனால் சென்னைக்கு வருவதற்கு முன்பே, சசிகலாவை சந்திக்க விஜயசாந்தி நேரம் கேட்டு இருக்கிறார்.

சசிகலா
அதன்படி சசிகலாவை தொடர்பு கொண்டு, " உங்களை சந்திக்க வரட்டுமா அம்மா? " என கேட்டிருக்கிறார் விஜயசாந்தி. சசிகலாவும் வரச்சொல்லவே, சென்னை வந்தார் விஜயசாந்தி. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே சில பல பண உதவிகளை விஜயசாந்திக்கு செய்திருப்பவர் சசிகலா. அந்த நன்றியை எப்போதும் விஜயசாந்தி மறந்ததில்லை என்கிறார்கள்.

விஜயசாந்தி
சசிகலா- விஜயசாந்தி சந்திப்பில் அரசியல் இல்லை என அவர் சொன்னாலும் அரசியல் குறித்தே இருவரும் விவாதித்திருக்கிறார்கள் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அதிமுக தலைமை என்னிடம் வருவதற்கு பாஜக தலைவர்களிடம் நீங்கள் பேச வேண்டும். எடப்பாடியும் பன்னீரும் நம்பிக்கை துரோகிகள். இதனை பாஜக தலைவர்களுக்கு புரிய வையுங்கள் என்று சசிகலா விஜயசாந்தியிடம் கேட்டு இருக்கிறாராம்.

வலிமை
அதாவது விஜயசாந்தி மூலம் டெல்லி தலைமைக்கு தூது அனுப்பும் பிளான் பியை சசிகலா கையில் எடுத்து இருக்கிறாராம். முன்பு விஜயசாந்திக்கு செய்த உதவிகளுக்கு இப்போது கைமாறு கிடைக்கும் என்று சசிகலா நம்புகிறாராம். அதிமுக ஒற்றை தலைமைக்குள் வந்தால் தான் வலிமையாகும். அது என் தலைமையில் வரும்போது அதிமுக வலிமையாகும். அவர்களது பாஜக விசுவாசத்தில் உண்மை கிடையாது.

அதிமுக பாஜக
என்னை நம்பச் சொல்லி வலியுறுத்துங்கள். ஒரு காலத்தில் அதிமுகவும் காங்கிரஸும் தான் இயற்கையான கூட்டணி என சொல்வார்கள். அதேபோல அதிமுகவும் பாஜகவும் இயற்கையான கூட்டணி என்பதை என் தலைமையில் உருவாக்க முடியும். தேர்தல் காலங்களில் 60:40 என்ற விதத்தில் இடங்களை பகிர்ந்து கொள்ள என் தலைமையில் அதிமுக வந்தால்தான் பாஜகவின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று சசிகலா விஜயசாந்தியிடம் குறிப்பிட்டு இருக்கிறாராம்.
Recommended Video

கூட்டணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கேட்ட இடங்களை அதிமுக கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைமைக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக சசிகலா விஜயசாந்தியிடம் பேசி இருக்கிறாராம். இதையெல்லாம் பாஜக தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி அதிமுக என்னிடம் வருவதற்கு முயற்சி செய்யுங்கள் என விஜயசாந்தியிடம் கேட்டுக்கொண்டாராம் சசிகலா. அதற்கு, உங்களுக்காக அனைத்து சோர்ஸ்களையும் பயன்படுத்துவேன்.. நம்பிக்கையாக இருங்கள் என நம்பிக்கை கொடுத்துவிட்டு சென்றுள்ளாராம் விஜயசாந்தி.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications