நீச்சல் தெரியாதா! தண்ணீருக்குள் விழுந்தாலும் உயிர் பிழைப்பீர்கள்! எதை செய்யலாம்! எதை செய்யக் கூடாது?
சென்னை: நீச்சல் தெரியாதவர்கள் இடறி தண்ணீருக்குள் விழுந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஒரு நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் டிப்ஸ்களை தெரிவித்துள்ளார்.
நீச்சல் பயிற்சி என்பது உடலுக்கு நல்லதொரு உடற்பயிற்சியாகும். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவரவர் ஒவ்வொரு விதமான பார்முலாவை கையாளுகிறார்கள். உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி என உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்கள்.

அந்தவகையில் நீச்சல் பயிற்சியும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும், குறித்த நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் நீச்சலின் போது இயங்குகிறது.
இதனால் ரத்த ஓட்டம் எல்லாவற்றுக்கு நல்ல மாதிரியாக பாயும். நீச்சல் தெரிந்தால் தண்ணீரில் தத்தளிப்போரையும் காப்பாற்ற உதவும். இது ஒரு புறமிருக்க, நீர் நிலைகளுக்கு செல்லும் போது தவறி விழுந்த பலர் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் சிலரை அவ்வழியாக செல்வோர் காப்பாற்றக் கூடும்.
நீச்சல் தெரியாதவர்கள் கவனத்திற்கு - Basic Survival Knowledge ! pic.twitter.com/3HN6RpIHdk
— Vignesh (@pc_vignesh) January 6, 2024
ஆனால் தம்மை காப்பாற்ற யாருமில்லாத சமயங்களில் என்ன செய்ய வேண்டும். இது குறித்து அஜித் நீச்சல் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: ஒரு வேளை நீங்கள் தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறீர்கள், உங்களை காப்பாற்ற யாரும் இல்லை.

அந்த சமயத்தில் உங்கள் உயிரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா, மூச்சை உள்ளிழுப்பது, மூச்சை சில வினாடிகள் பிடித்து நிறுத்தி வைப்பது செய்ய வேண்டும். மூச்சை 20 வினாடிகள் நிறுத்தி வைத்தால் போதும். தண்ணீர் உங்களை மேலே கொண்டு வரும். எந்த ஆக்ஷனும் செய்யாமல் இருக்க வேண்டும்,
கைகளை மேலே தூக்கினால் தண்ணீர் உங்களை உள்ளே இழுக்கும். மேலே வரும் போது மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள், உள்ளே போகும் போது மூச்சை விடாமல் பிடியுங்கள், அப்போது தண்ணீர் உங்களை மேலே கொண்டு வரும். அப்போது மூச்சை இழுங்கள். நெஞ்சு பகுதியில் காற்று இருந்தாலே தண்ணீர் உங்களை மேலே கொண்டு வரும் , உள்ளே தள்ளிவிடாது. எனவே நீச்சல் தெரியாதவர்கள் யாரும் இல்லாத போது இப்படி செய்யலாம் என அந்த நீச்சல் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications