ஆஹா.. எழுதி இருந்ததை நோட் பண்ணீங்களா? ஆளுநரின் தேநீர் விருந்தில் இருந்த "போர்ட்".. சீறி வரும் திமுக!
சென்னை: நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த போர்ட் ஒன்று இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பலர் இந்த போர்ட் குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாடு முழுக்க நேற்று 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் நேற்று கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதன்பின் மாலையில் ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆர். என் ரவி நேரில் சென்று வரவேற்றார். அதேபோல் மேடையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் இவர்களுக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வமிற்கும் முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் இரண்டாம் வரிசையில் அதிமுகவின் மற்ற தலைகளுக்கு இடம் தரப்பட்டது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த போர்ட் ஒன்று இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போர்ட் ஒன்றில் பாஜக கட்சியினர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாஜக
அதாவது அரசியல் கட்சி தலைவர்கள் / பாஜகவினர் இங்கே அமரலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மற்ற கட்சிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் பாஜகவின் பெயரை மட்டும் குறிப்பிட்டது ஏன். பாஜகவிற்கு மட்டும் தனியாக போர்ட் வைத்தது ஏன். அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஏற்பாடு ஏன் என்ற கேள்வியை இணையத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர். திமுகவினர் பலர் இந்த போர்ட் குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வரவில்லை
அது என்ன பாஜகவிற்கு மட்டும் சிறப்பு மரியாதை. ஆளுநர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் தானே. ஏன் பாஜகவிற்கு மட்டும் போர்ட் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று நடந்த நிகழ்வில் இத்தனைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. பாஜக சார்பில் துணை தலைவர் விபி துரைசாமி மட்டுமே கலந்து கொண்டார். அப்படி இருக்கும் போது பாஜகவிற்கு மட்டும் சிறப்பு கவனிப்பு ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications