Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. எழுதி இருந்ததை நோட் பண்ணீங்களா? ஆளுநரின் தேநீர் விருந்தில் இருந்த "போர்ட்".. சீறி வரும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த போர்ட் ஒன்று இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பலர் இந்த போர்ட் குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாடு முழுக்க நேற்று 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் நேற்று கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதன்பின் மாலையில் ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆர். என் ரவி நேரில் சென்று வரவேற்றார். அதேபோல் மேடையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் இவர்களுக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வமிற்கும் முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் இரண்டாம் வரிசையில் அதிமுகவின் மற்ற தலைகளுக்கு இடம் தரப்பட்டது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த போர்ட் ஒன்று இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போர்ட் ஒன்றில் பாஜக கட்சியினர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாஜக

பாஜக

அதாவது அரசியல் கட்சி தலைவர்கள் / பாஜகவினர் இங்கே அமரலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மற்ற கட்சிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் பாஜகவின் பெயரை மட்டும் குறிப்பிட்டது ஏன். பாஜகவிற்கு மட்டும் தனியாக போர்ட் வைத்தது ஏன். அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஏற்பாடு ஏன் என்ற கேள்வியை இணையத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர். திமுகவினர் பலர் இந்த போர்ட் குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வரவில்லை

வரவில்லை

அது என்ன பாஜகவிற்கு மட்டும் சிறப்பு மரியாதை. ஆளுநர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் தானே. ஏன் பாஜகவிற்கு மட்டும் போர்ட் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று நடந்த நிகழ்வில் இத்தனைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. பாஜக சார்பில் துணை தலைவர் விபி துரைசாமி மட்டுமே கலந்து கொண்டார். அப்படி இருக்கும் போது பாஜகவிற்கு மட்டும் சிறப்பு கவனிப்பு ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+