நாளை அனல் பறக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்?.. யார் யாருக்கு கொட்டு விழும்?
சென்னை: நாளை நடைபெறவுள்ள அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பேசுவதற்கு பதிலாக பாஜக குறித்து அதிகம் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளை பிடிக்க அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் என்பது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்டவைகளை நிர்வாகம் செய்ய நடத்தப்படும் ஒரு தேர்தலாகும். இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகளை கவனிப்பர்.

திமுக தேர்தல்
இந்த தேர்தலில் திமுக எப்படியாவது வெல்ல வேண்டும் என ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அது போல் சட்டசபை தேர்தலில் விட்டதை உள்ளாட்சி தேர்தலில் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் முட்டி மோதுகிறது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்த நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அதிமுக நடத்துகிறது.

தீர்மானம்
இதில் தேர்தல் நடக்கவிருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை எப்படி பகிர்ந்து கொள்வது, உள்ளாட்சி தேர்தலில் எப்படி வெல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த தீர்மானித்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக, அதிமுக கூட்டணியில் பாஜகவை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பாஜக கூட்டணி தொடரும்
சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் பாஜகவுடனான கூட்டணி என சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.

விவாத பொருளான பாஜக
நீங்கள் தான்.. இல்லை நீங்கள்தான்.. என ஒவ்வொருவரும் மாறி மாறி பேசிக் கொண்டதால் அதிமுக- பாஜக இடையே பிளவுப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியிலிருந்து கொண்டு அதிமுக கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காதது அதிமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாளை நடைபெறும் கூட்டத்தில் பாஜக குறித்தே அதிகம் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications