சூப்பர்..! இந்த மாவட்டங்களில் நல்ல மழை இருக்கு.. தலைநகர் சென்னையில் கிளைமேட் எப்படி- வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த முறை ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இயல்பைக் காட்டிலும் அதிகமாகவே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள்

கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜன.23) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை (ஜன.24) தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

 வரும் நாட்கள்

வரும் நாட்கள்

நாளை மறுநாள் (ஜன.25) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.. வரும் ஜன.26 மற்றும் ஜன.27 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

 தலைநகர் சென்னை

தலைநகர் சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் எங்கும் பெரியளவில் மழை பெய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று (ஜன.23) குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை (ஜன.24) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 தவிர்க்க வேண்டிய பகுதிகள்

தவிர்க்க வேண்டிய பகுதிகள்

வரும் ஜன.25 மற்றும் ஜன.26 தேதிகளில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜன.27 இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+