"ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு.. வந்தா என்னவெல்லாம் செய்வாரோ?" - விஜய் மீது அப்பாவு அட்டாக்!
சென்னை: "தவெக தலைவர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்ததால் விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம், உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்யும் தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்?" என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்டம், ரெட்டியார்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பார்வையிட்டார்.

அப்பாவு பேட்டி
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, "முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்படுகின்றன. இந்நிலையில், நெல்லை ரெட்டியார்பட்டியில், நீர்நிலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 876 குடும்பங்களுக்கு, சுமார் ரூ.129 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 400 சதுர அடியில், சந்தை மதிப்பில் ரூ.18 லட்சம் மதிப்பிலானது'' என்றார்.
மேலும், பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தின் கடன் 5.18 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், நாங்கள் வாங்கிய கடன் அனைத்தும் கல்வி, மருத்துவம், மகளிருக்கு மாதம் ரூ.1000, காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்றபோது இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி அரசு வாங்கிய கடனில் ரூ.16 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளது" என குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வராமலேயே விஜய் இப்படி
மேலும் பேசிய அப்பாவு, "விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததால்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் ஆட்சிக்கு வராமலேயே வரி ஏய்ப்பு செய்துள்ளார், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை மக்கள் அறிவார்கள்." எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்து வருவது குறித்து பதிலளித்த அப்பாவு, "திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. தனிப்பட்ட நபர்களின் கருத்து கூட்டணியைப் பாதிக்காது. என்னுடன் இதோ காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளார், அவருக்கும் அது தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications