Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிக்கு 200 கி.மீ. வேகம்.. சென்னை ஐசிஎப்-ன் அதிவேக வந்தே பாரத் ரயில் வருது.. தமிழ்நாட்டுக்கே ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. அதனால்தான், இங்கு இப்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

When will Sleeper Coach Vande Bharat Train ready in Tamil Nadu and 200 km high speed vande bharat train by Chennai ICF

ஐசிஎப்: அந்தவகையில், வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவையும் இந்த ஐசிஎப் பெற்று வருகிறது.. இதன் அடுத்தடுத்த விரிவாக்கமும் நடந்து வருகிறது.. 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன... வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

வந்தே பாரத்: இதைத்தவிர, 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.. இதில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதில் வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை, அடுத்த 5 வருடங்களில் 400 வந்தேபாரத் ரயில்களை இயக்கரயில்வே திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர, வந்தே மெட்ரோ, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத், பார்சல் வந்தே பாரத் ஆகிய ரயில்களையும் அடுத்தடுத்து தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே திட்டம்: இந்நிலையில் இன்னொரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. அதாவது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் சொன்னதாவது:

பெங்களூரில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான, பி.இ.எம்.எல். நிறுவனத்தில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் முதல் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பயன்பாட்டுக்கு வந்தவுடன், சென்னை ஐசிஎஃப்பிலும் படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில் தயாரிக்கப்பட உள்ளது.

புதிய வேகம்: வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் தற்போது செல்லும்நிலையில், 160 கி.மீ.வேகத்திலும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான, பாதைகள் மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதுபோலவே, அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான, ஆரம்பக்கட்ட பணிகளும் ஆரம்பமாகி உள்ளன..

ரயில்பாதை: குறிப்பாக, ரயில்பாதை மேம்பாடு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.
இதற்கான, ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரிக்க உள்ளது.

இந்த ரயில் பெட்டிகளில் முக்கியமானதாக இருக்கும் "போகி" எனப்படும் அடிச்சட்டம் தயாரிப்பு குறித்து, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி,அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ள உள்ளோம்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+