அண்ணாமலை பாதயாத்திரை பொங்கலுக்கு பிறகும் நீடிக்க வாய்ப்பு! என்ன பின்னணி?
சென்னை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொங்கலுக்கு முன்பாக சென்னையில் தனது நடைபயணத்தை நிறைவு செய்யவிருந்த நிலையில் அது மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மிக் ஜாம் புயலால் கொட்டிய கனமழை காரணமாக சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்ததால், தனது பாத யாத்திரையை ரத்து செய்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை. இதனால் வரும் 16ஆம் தேதி அன்று தான் மீண்டும் தனது நடைபயணத்தை வடமாவட்டங்களில் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை தென் மண்டலம், கொங்கு மண்டலம், மத்திய மண்டலம், டெல்டா மண்டலம் என 4 மண்டலங்களிலும் பாத யாத்திரையை நிறைவு செய்து இப்போது வடக்கு மண்டலத்தில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது பாஜக தேசியத் தலைமை.
மொத்தம் 168 நாட்களுக்கு பாத யாத்திரை திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதல் நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அண்ணாமலை பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் அமர் பிரசாத் ரெட்டி கைது, அதிமுக பாஜக கூட்டணி பிளவு, அண்ணாமலைக்கு காய்ச்சல், மிக் ஜாம் புயல் என இடை இடையே பல காரணங்களால் யாத்திரை குறிப்பிட்ட தேதியிலிருந்து சில நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனால் முன் திட்டமிட்டப்படி ஜனவரி 11ஆம் தேதி அன்று சென்னையில் பாதயாத்திரை நிறைவு செய்யப்படுமா என்பது கேள்விக்குறிதான். பொங்கலுக்கு பிறகு கூடுதலாக 10 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஜனவரி 26ஆம் தேதிக்குள் யாத்திரை நிறைவடையலாம் எனத் தெரிகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications