புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் எங்கே? தலைமறைவானவர்களை கைது செய்ய தனிப்படை போலீஸ் தீவிரம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். தலைமறைவானவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார்.

புஸ்சி ஆனந்த் மீது வழக்கு பதிவு
கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே புஸ்சி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. "எங்கள் தொண்டர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது" என்று முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல் உள்ளது.
வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியபோதே காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, அது ஒரு விபத்துதான்," என புஸ்சி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
திட்டமிட்ட செயல் அல்ல
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல்கள் திருவடிக்குமார், ரவி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை கடுமையாக பாதிக்கப்படும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். பின்னர் மனுதாரர் வக்கீல்கள் ஆஜராகி, சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல.
ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வாதாடினர். இதற்கு அரசு வக்கீல்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வாதாடியபோது, மனுதாரர்களின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும், சாட்சியும் கிடையாது. இது போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் மனுதாரர்கள் வக்கீல்கள், கட்சியின் பொதுச் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்றனர்.
கைது செய்ய போலீசார் தீவிரம்
அதற்கு நீதிபதி, "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும்போது அதற்கான பொறுப்பு வேண்டும்தானே?" என கேள்வி எழுப்பினார். பின்னர் மனுதாரர் வக்கீல்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். இருதரப்பின் வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, "கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்த துயரமான சம்பவம் நடந்த சில நாட்கள்தான் ஆகிறது.
இது தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். எனவே மனுதாரர்களின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார். இதையடுத்து, புஸ்சி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் கைது ஆகலாம்
இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, சேலம், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆனந்த் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புஸ்சி ஆனந்துக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக புஸ்சி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
NDA கூட்டணியில் விஜய்? எஸ்பி வேலுமணி எடுக்கும் கடைசி கட்ட முயற்சி.. முக்கிய புள்ளி சொன்ன தகவல் -
நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
100ஆ ஹலோ கண்ட்ரோல் ரூமா? விஜய்யின் தவெகவை பாருங்க சார்.. நள்ளிரவில் தனலட்சுமியால் அலறிய கோவை போலீஸ் -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
பொண்டாட்டி இருக்க, திரிஷா தேவையா? தெலுங்கு ரவி தேஜா படத்தின் வசனத்தில் உள்குத்து! பின்னணி சம்பவம் -
Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம் -
தேர்தல் நெருங்கும் நேரம், விஜய்யின் மாஸ்டர் பிளான்.. “வீடியோ” வரப்போகுதாமே! பல கேள்விகளுக்கான விடை












Click it and Unblock the Notifications