"மாயாவி" ஜெயகோபால்.. அப்படி எங்கேதான் போய் விட்டார்.. கோர்ட் கேட்டதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு!
Recommended Video
சென்னை: முக்கிய குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்குத் தப்பிவிட்டாரா? என்று நீதிமன்றம் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.
பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ மரணத்துக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. முக்கிய குற்றவாளியான ஜெயகோபால் எங்கே என்றே தெரியவில்லை.
சுபஸ்ரீ இறந்த அன்றே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பியது. அப்போது ஜெயகோபால் காணவில்லை. மாயமான அவரை தேடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், ஜெயகோபாலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க முடியவில்லை என்று கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது நம் போலீஸார்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடவடிக்கை
அதனால் நீதிபதிகள் இந்த விஷயத்தில் இன்னும் கோபமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ''வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ? லாரி ஓட்டுநர் மீது போடப்பட்ட வழக்குடன் பேனர் வைத்தவரை எப்படி சேர்க்கலாம்'' என்று நீதிபதிகள் கேள்வி கேட்டதற்கும் சரியான பதில் தெரிவிக்காததும் ஆச்சரியமாக உள்ளது.

பொதுமக்கள்
ஜெயகோபால் ஆளும் தரப்பை சேர்ந்தவர். ஒருவேளை இந்த விஷயத்தில் ஆளும் தரப்பும், போலீசும் அவருக்கு சாதகமாக செயல்படுகிறதோ என்ற சந்தேக கணைகளை சுபஸ்ரீ இறந்த நாளில் இருந்தே பொதுமக்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர். அப்படியானால், இந்த விவகாரத்தில் போலீசாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

உதிர் சூர்யா
இதே உதித் சூர்யா விவகாரத்தில் நம் போலீசாரை பாராட்டாமல் இருக்க முடியாது. தவறு நடந்துள்ளது என்று தெரிந்ததுமே, கட்டி அலேக்காக தூக்கி கொண்டு வந்துவிடும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களே. அதேபோல, தலைமறைவாக உள்ள ஜெயகோபாலையும் கைது செய்ய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனிப்படை
ஆளும் தரப்பை சேர்ந்தவர் என்ற அடையாளத்தை தவிர்த்து, அநியாயமாக ஒரு உசுரு போக காரணமாக இருந்தவர் என்ற கோணத்தில் இதை போலீசார் அணுக வேண்டும் என்பதே நம் எண்ணமாக இருக்கிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகளை முடக்கிவிட்டு, ஜெயகோபாலை விரைவாக பிடித்தால், மக்களிடம் நல்ல பெயரை எளிதாக வாங்க முடியும். இதன்மூலம் போலீசார் மீது மக்களுக்கு மேலும் பிடிப்பும், நெருக்கமும் நிச்சயம் ஏற்படும்.

பெருத்த நம்பிக்கை
கோர்ட் கண்டனங்களையும் சம்பாதிப்பதை தடுக்க முடியும், தவிர்க்க முடியும். இது எல்லாவற்றையும்விட பெற்ற மகளை பறிகொடுத்து கலங்கி கொண்டிருக்கும் அந்த ஜீவன்களுக்கு, இந்த கைது நடவடிக்கையால் ஒரு சொற்ப ஆறுதலாவது கிடைக்கும். வெட்டி வா என்றால், கட்டி வந்து நிற்கும் நம் போலீசார் மீதான மலைபோல் நம்பிக்கை இன்னமும் மக்களுக்கு குறைந்துபோய் விடவில்லை!
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications