என்னது செந்தில் பாலாஜி சிறையிலேயே இல்லையா.. உற்று பார்க்கும் மத்திய உளவுத்துறை!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் அவரின் செல்லில் அடைக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை: அதன்பின் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் 5 நாட்கள் கஸ்டடியும் எடுக்கப்பட்டார். 5 நாட்கள் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விசாரணை முடிந்து கடந்த 12-ந்தேதி இரவு புழலுக்கு அனுப்பப்பட்டார் செந்தில்பாலாஜி. புழல் சிறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி ஒப்படைக்கப்பட்டார்.
இங்கே இருக்கிறார்?: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் அவரின் செல்லில் அடைக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.
புழலுக்கு சென்ற அவரை அவருக்குரிய செல்லில் அடைக்கப்படவில்லை. வழக்கம்போல, சிறையில் இருந்த மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டார். இது சிறை துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்காக செய்தனர். அரசின் உத்தரவின்படியே நடக்கிறது. கஸ்டடி முடிந்து 12-ந்தேதி நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை ஆஜர் படுத்தியபோது, அவரது உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், ரிமாண்ட் செய்யப்பட்ட அவரை அவருக்குரிய செல்லில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசின் உத்தரவும், செந்தில் பாலாஜியின் கவனிப்பும் இருப்பதால் செல்லில் அடைக்கப்படாமல் மருத்துவமனையில் சேர்த்தனர் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் விசாரணை காரணமாக அவரின் உடல்நலம் கொஞ்சம் குன்றி இருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் சிறைக்கு பதில் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய உளவுத்துறை ரகசியமாக விசாரித்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications