சிட்ரங் புயல்: எப்போது எங்கே கரையை கடக்கிறது?.. எந்தெந்த பகுதிகளை தாக்கும்?
சென்னை: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த காழ்வு பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.
வடகிழக்கு பருவமழை சீசன் அக்டோபர் 4 ஆவது வாரம் தொடங்கப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதாவது 2 வாரம் தாமதமாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் உருவானது. இது இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
பின்னர் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். இது தீபாவளி பண்டிகையின் போது புயலாக மாறுகிறது. இதற்கு சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிசீலனை செய்தது. இந்த நிலையில் இந்த சிட்ரங் தீபாவளி பண்டிகையின் போது வடமேற்கு பக்கமாக நகர்கிறது.

தமிழகத்தில் பாதிப்பா
தீபாவளி பண்டிகையின் போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இந்த புயல் காரணமாக இன்று முதல் தென் கிழக்கு வங்கக் கடல் வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். 24ம் தேதி புயலாக மாறும் போது மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசும்.

காற்று வேகம்
சில நேரங்களில் 85 கிமீ வேகத்திலும் வீசும். இதையடுத்து, 25ம் தேதி இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் இந்த நிகழ்வு நீடிப்பதை அடுத்து, 25ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழையும் தொடரும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முதலாவது புயல் இதுவாகும்.

எங்கு மழை
இந்த புயலால் ஒடிஸா, மியான்மர் பகுதிகளுக்கும் பாதிப்பை கொடுக்கும் என தெரிகிறது. இந்த புயலால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அது போல் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் சில இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புண்டு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications