Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன மோச்சா புயல்? பெயர் வைத்தது இந்த நாடா.. புயலுக்கு பெயர் வைக்கப்படுவது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மோச்சா என்று பெயர் வைத்தது எந்த நாடு? புயல்களுக்கு எதன் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன? விரிவாக பார்ப்போம்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைய உள்ளது. நாளை மறுநாள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

 Which country named Mocha Cyclone? How are cyclones are named?

இந்த புதிய புயலுக்கு மோச்சா என பெயரிடப்பட்டு இருக்கிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டு அவை, புயல் கரையை கடக்கும் வரை ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் புழக்கத்தில். அப்படி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயல், ஓகி புயல், தானே புயல், வர்தா புயல், நிசா புயல் என பல்வேறு புயல்கள் இன்று வரை மக்கள் மனதில் இடம்பெற்று உள்ளன.

இந்த புயல்களுக்கு பல்வேறு நாடுகள் பெயரிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வங்கக்கடலில் உருவாக இருப்பதாக கூறப்படும் புயலுக்கு "மோச்சா" என்று பெயர் வைத்தது ஏமன். அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் மோச்சா என்ற நகரம் அமைந்து இருக்கிறது. செங்கடலை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நகரத்தின் பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து அது தற்போது இந்த புயலுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புயல்களுக்கு உலக வானிலை அமைப்பான WMO மற்றும் ESCAP எனப்படும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளும் பெயர்களை வைக்கின்றன. புயல்களுக்கு பெயர்களை வைப்பதற்கு என்றே சில விதிகள் உள்ளன. இதுகுறித்து உலக வானிலை அமைப்பின் இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில், இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு எழுத்து வரிசைப்படி, ஆண் மற்றும் பெண் பெயர்கள் மாறி மாறி வைக்கப்படும். அதேபோல் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய நாடுகள், கடந்த 2000 வது ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர் வைப்பதில் புதிய வழிமுறைகளை பின்பற்ற தொடங்கின.

எழுத்து வரிசைப்படி அந்த பெயர்கள் நாடுகள் வாரியாக பட்டியலிடப்படும். அதில் இருபாலின பெயர்களும் இருக்கும். என உலக வானிலை அமைப்பு தெரிவித்து இருக்கிறது. சில புயல்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும். அதேபோல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்களும் ஏற்படலாம். எனவே குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி அதற்கு பெயர்களை வைக்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+