பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2024 : தமிழகத்தில் தேர்ச்சி சதவீதத்தில் எந்த மாவட்டம் டாப்! எது கடைசி?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி சதவீதத்தில் கோவை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 91.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 4.04 லட்சம் பேரும் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 1964 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியும். தனியார் பள்ளிகள் 98.09சதவீத தேர்ச்சியும் இரு பாலர் பள்ளிகள் 91.61 சதவீத தேர்ச்சியும் பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.
கணினி அறிவியலில் 3432 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அது போல் கணிதத்தில் 779 பேரும் பொருளியலில் 741 பேரும் இயற்பியலில் 696 பேரும் வேதியியலில் 493 பேரும், தமிழில் 8 பேரும் ஆங்கிலத்தில் 13 பேரும் உயிரியலில் 171 பேரும் தாவரவியலில் 2 பேரும் கணக்கு பதிவியலில் 415 பேரும் 100-க்கு 100 பெற்றுள்ளனர்.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.02 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று கோவை முதலிடத்தை பெற்றுள்ளது. அது போல் சதவீதம் தேர்ச்சி பெற்று வேலூர் கடைசி இடம் பிடித்துள்ளது.
கோவை 96.02%
ஈரோடு 95.56%
திருப்பூர் 95.23%
விருதுநகர்- 95.06%
அரியலூர்- 94.96%
பெரம்பலூர் 94.82%
சிவகங்கை 94.57%
திருச்சி 94.00%
கன்னியாகுமரி 93.96%
தூத்துக்குடி 93.86%
கடலூர்- 91.01%
செங்கல்பட்டு 90.85%
தருமபுரி- 90.49%
தேனி 90.08%
திண்டுக்கல் 89.97%
விழுப்புரம் 89.41%
திருவண்ணாமலை 89.41%
தஞ்சை- 89.07%
திருவண்ணாமலை 88.91%
புதுக்கோட்டை 88.02%
ராணிப்பேட்டை 87.86%
கள்ளக்குறிச்சி 86.00%
திருவள்ளூர் 85.54%
வேலூர் 81.40%
புதுவை- 97.89 %
காரைக்கால்- 96.27%
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் மறுதேர்வு நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications