யார் இந்த ‘ஜோக் ராஜ்’? டிரெண்டிங் ஆன மளிகைக் கடைக்காரர்?
சென்னை: சமூக ஊடகத்தில் ஜோக்ஸ் சொல்லும் வீடியோக்களை வெளியிட்டுவந்த மளிகை கடைக்காரர் ஒருவர் இரண்டு நாட்களாக டிரெண்டிங் ஆகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் முழுக்க டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் முத்துராஜா. இவர் ஜோக்ஸ் எனப் பேசி பதிவிடும் ரீல்ஸ் இணைய உலகில் தீயாகப் பரவிவருகிறது. இவர் ராமு, சோமு என கேரக்டர்களை வைத்து ஜோக்ஸ் சொல்வதைப் பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி எடுத்துக் கலாய்த்து வீடியோ போட ஒரே இரவில் புகழ் மழையில் நனைந்து வருகிறார் முத்துராஜா. இவர் யார்? இவருக்கு ஜோக் எழுதித் தருவது யார்?

இந்த முத்துராஜா என்பவர் திருவொற்றியூரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் மளிகைக் கடையில் வியாபாரம் செய்கிறாரோ இல்லையோ ஃபேஸ்புக்கில் நிறையக் குட்டிக்குட்டி ஜோக்ஸ் சொல்லி ரீல்ஸ் போட்டுவிடுவார். அடிப்படையில் சினிமா வெறியர் இந்த முத்துராஜா. அவருக்குள் புதைந்து கிடந்த சினிமா கனவை சமூக ஊடகங்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தன் மனதில் உதிக்கும் ஜோக்குகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்கிறார் முத்துராஜா. அதை வீடியோவாக பதிவிட வேண்டும் என்பதற்காகத் தினம் 5 சட்டைகள் வீட்டிலிருந்து மளிகைக் கடைக்குக் கொண்டுவந்து விடுகிறார். அப்புறம் என்ன? வியாபாரத்தைக் கவனிக்கிறாரோ இல்லையோ? வீடியோ பேசி அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுகிறார்.
அத்தனையும் மொக்கை ஜோக்ஸ். ராமு, சோமு என இவரே கதாபாத்திரங்களுக்குப் பெயரை வைத்து அப்படியே ஆறாம் வகுப்பு பிள்ளையைப் போல முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் வெளிப்படுத்தி வீடியோ போடுவதால், இவரை இன்றைய இளைய தலைமுறை பூமர் அங்கிள் என்ற அளவில் கலாய்த்து வருகிறது. அதைப் பற்றி கவலை இல்லை என்கிறார் இவர்.

சோகமான இந்த உலகத்தில் நகைச்சுவைக்குத்தான் பஞ்சம் உள்ளது என்றும் யாரும் முழுமையாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடும் இவர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே இப்படி வீடியோ வெளியிடுகிறேன் என்கிறார்.
"முன்பு திருவொற்றியூரில் 5 திரையரங்குகள் இருந்தன. அதில் தினம் ஒரு படத்தைப் பார்த்து பொழுதைக் கழிப்பேன். காமெடி, ஆக்ஷன் படங்களைத்தான் பார்ப்பேன். இப்போது இரண்டு தியேட்டர்கள் தான் உள்ளன. ஆகவே அதிக நேரம் கிடைக்கிறது. அதை வைத்து வீடியோ போட்டு மக்களைச் சந்தோஷப்படுத்தி வருகிறேன்" என்கிறார் இந்த கலக்கல் காமெடி மேன்.
பரிதாபங்கள் சுதாகரும், கோபியும் தன்னைப் பற்றிப் பேசி வீடியோ போட்ட பிறகு தினம் 500 பேர் வரை இவரை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்தளவுக்குத் தான் ரீச் ஆவதற்கு இந்த இருவரும்தான் காரணம் என்கிறார் முத்துராஜா. இவரை இணைய உலகம் 'ஜோக் ஸ்டார்' முத்துராஜா என்று பட்டப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். அது தனக்குப் பெருமையாக உள்ளது என்கிறார் இந்த மளிகைக் கடைக்காரர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications