Fail செய்ய யார் சொன்னாங்க.. அப்படி ஒன்றும் இல்லை.. CBSE சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வாங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ - இன் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு எதை சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிராக கூறி வருவதாகவும், சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி விகிதத்திற்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை குழந்தைகளின் கல்விக் கனவை தகர்க்கும் நடவடிக்கை என்றும், தேர்வு என்றாலே என்ன தெரியாத மாணவர்களுக்கு இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

9 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நிலை இருந்து வந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த நடைமுறை தற்போது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்களையும் பள்ளிகள் சார்பில் பெறப்பட்டு வருகிறது. தற்போது, அடுத்த வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டதால், இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி நாம் நம்முடைய பிள்ளைகளை பாதுகாத்துவிட்டோம். ஆனால், சிபிஎஸ்இ படிக்கும் பிள்ளைகள், பெற்றோருக்கு தனி சட்டம் அமல்படுத்தப்படும்போது இடைநிற்றல் அதிகமாகும். இதனை பெற்றோர்கள் எதிர்த்து கேள்விகள் கேட்க வேண்டும். சிபிஎஸ்இயின் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மூலம் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம்.
சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை ஃபெயில் ஆக்குவதற்கான நடைமுறைக்கு ஒப்புதல் கடிதம் கோரினால் அதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள். சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது." என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை. மத்திய அரசு எது சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிர்ப்பாகத்தான் எதையாவது சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications