திமுகவின் புதிய மகளிரணி செயலாளர் யார்? ஸ்டாலின் கொடுத்த சுதந்திரம்? கனிமொழி கைகாட்டும் பெண் "இவரா"?
சென்னை: திமுகவின் அடுத்த மகளிரணி செயலாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவின் மகளிரணி செயலாளராக இருப்பவர் கனிமொழி. இவர் இந்த பதவிக்கு வந்த பிறகுதான் திமுகவின் மகளிரணியின் செயல்பாடுகளும் திமுகவின் செயல்பாடுகளும் வெளியுலகிற்கு தெரியவந்தன.
எந்தவித மோதல்களும் சலசலப்புகளும் இல்லாமல் கனிமொழி மகளிர் அணியை நடத்தி வந்தார். அவர் சொல்லுக்கு மகளிரணியினர் கட்டுப்பட்டனர். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

திமுக துணை பொதுச் செயலாளர்
இந்த நிலையில் திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்த பதவி கனிமொழிக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் வகித்து வரும் மகளிரணி செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகளிரணி
இளைஞரணியை போல் மகளிரணியும் ஒரு கட்சிக்கு முக்கியமானது என்பதால் கனிமொழியை போன்றதொரு ஆளுமையையோ அல்லது அவரது மேற்பார்வையில் செயல்படும் நபரையோ அந்த பதவியில் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த பதவிக்கு இருவரின் பெயர் அடிபடுகிறது.

தமிழரசியா தமிழச்சியா
ஒருவர் முன்னாள் அமைச்சர் தமிழரசி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆவர். மகளிரணியை சிறப்பாக வழிநடத்தியதால் அந்த பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்ற பொறுப்பை கனிமொழியிடமே முதல்வர் ஸ்டாலின் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் யாரிடம் கொடுத்தாலும் கனிமொழியின் மேற்பார்வையில் மகளிரணி இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

தமிழரசியே சாய்ஸ்
எனவே தமிழரசி, தமிழச்சி தங்கபாண்டியனில் கனிமொழியின் சாய்ஸ் தமிழரசியாகவே இருக்கும் என்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் தமிழரசி இருந்தார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். சமூக நீதி, சமத்துவம் என்பது திமுகவின் அடிப்படை கொள்கையாக உள்ள நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் முக்கிய பதவியை கொடுத்தால் அது அந்த சமூகத்து வாக்குகளை பெற பிளஸ்ஸாக அமையும்.

தமிழரசி ஏன்?
இன்னொன்று இந்த முறை அமைச்சரவையில் தமிழரசி இடம்பெறவில்லை. எனவே அந்த வருத்தத்தை போக்க அவருக்கு மகளிரணி பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் அவர் கனிமொழியின் சொல்லுக்கும் கண்ணசைவுக்கும் கட்டுப்பட்டவர். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியனை எடுத்துக் கொண்டால் அவரும் எம்பி, கனிமொழியும் எம்பி. எனவே மகளிரணி செயலாளர் பதவியை தமிழச்சியிடம் கொடுத்துவிட்டு அதை இன்னொரு எம்பியான கனிமொழி மேற்பார்வையிடுவது சரிப்பட்டு வராது. எனவே கனிமொழியின் சாய்ஸ் தமிழரசியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications