பாஜகவை தொடர்ந்து சீண்டிய நடிகர் சித்தார்த்.. திடீர் சைலண்ட் ஏன்? மற்ற நடிகர்கள் செயலால் அதிருப்தி
சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வந்த நடிகர் சித்தார்த், கடந்த சில மாதங்களாக அமைதியாக இருப்பது ஏன் என்பது குறித்து அவரே விளக்கமளித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த். தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த இவரது நடிப்பில் டக்கர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இது தொடர்பாக யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நெறியாளர், "செயற்பாட்டாளராக சித்தார்த் மாறும்போது, அவரை நடிகராக பார்க்கும் சிலருடைய விமர்சனங்கள் என்னவாக உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், "செயற்பாட்டாளர் சித்தார்த்தாக மாறும்முன், நான் கல்லூரி படிக்கும்போதே செயற்பாட்டாளர்தான். மாணவர் அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன். நாடகம் போட்டு உள்ளேன். எல்லாம் செய்து இருக்கிறேன். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் எல்லாம் பேசியவன்தான்.
சமீப காலமாக ஏன் மௌனம் காக்கின்றீர்கள் என்று கேட்கிறார்கள். நான் மவுனம் எல்லாம் காக்கவில்லை. முன்பைபோல் எல்லாவற்றுக்கும் பேசுவதை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம், சுற்றி பார்த்தேன். நான் மட்டும்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நூறு நடிகர்களில் ஒருத்தன் மட்டும். நடிகர்கள் போராளி மாநாட்டில் சித்தார்த் மட்டும், அந்த மாதிரி இருக்கிறது.
சரி ஏதோ, நாம்தான் தவறு செய்கிறோமோ, அவர்கள் சரியாக இருக்கிறார்களா? என்று யோசித்தேன். எனவே நான் குறைத்துக்கொண்டேன். அக்கறை இருக்கிறதா என்றால், அக்கறை இருக்கிறது. ஆனால், என் தயாரிப்பாளர்கள் மீதும், என் தொழில் மீதும், என் குடும்பத்தின் மீதும், என்னுடைய மனநிலை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டேன். நாமும் பிழைக்க தெரிந்துகொள்வோம்.
சமூகத்தினால்தான் சினிமா வாழ்கிறது. ஆனால், அரசியல் தலைவர்கள் சினிமாவில் இருந்துதான் வரவேண்டும் என்ற கருத்தில் நான் முற்றிலுமாக முரண்படுகிறேன். சினிமாவில் இருந்து அரசியல் தலைவர்கள் வரலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால், சினிமாவில் இருந்துதான் கட்டாயம் வரவேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை.
அடுத்த அரசியல் தலைவர் சினிமா என்று சொல்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது. நான் அரசியலுக்கு போக மாட்டேன். நான் சினிமாவில்தான் இருப்பேன். சினிமாவில் மக்கள் என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து அன்பு செலுத்துகிறார்கள். அவர்கள் அந்த கதாபாத்திரத்தை கதாபாத்திரமாகவே பார்க்கலாம்.
கதாபாத்திரத்துக்கு இருக்கும் திறமைகள் எனக்கு இருப்பதாக அவர்கள் நினைப்பதில் உடன்பாடு இல்லை. எனக்கு அரசியல் அக்கறை இல்லை. ஒரு குடிமகனாக அக்கறை இருக்கிறது. அதில் முக்கியமான அக்கறை என்னவென்றால் 20 ஆண்டுகளாக நடிகனாக ரொம்ப நன்றாக சம்பாதித்து வாழ்கிறேன்.
என் வீட்டுக்கு இதுவரை ஒருமுறை கூட வரி தொடர்பாக ஒரு கேள்வி கூட வந்தது இல்லை. நான் அவ்வளவு நேர்மையாக வரி செலுத்துகிறேன். என்னுடைய முதல் கோரிக்கை என்னவென்றால் நீங்கள் அதிகமாக சம்பாதித்தால் வரி கட்டுங்கள். வரி கட்டாமல் இருக்க பத்தாயிரம் காரணங்கள் இருக்கலாம். வரி கட்ட ஒரேயொரு காரணம் போதும். அடுத்து வாக்களிக்கிறேன்.
இதை செய்தால் உங்கள் சித்தனையை வெளிப்படுத்தலாம். அதன்பின் உங்களை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கலாம். அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்ற அக்கறை எனக்கு இல்லை." என்றார்.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications