'உண்டியலில் காசு போட்டதை' வடிவேலு நியாயப்படுத்தும் காமெடி வீடியோ-சோசியல் மீடியாவில் செம்மையாக ஷேர்!
சென்னை: சோசியல் மீடியாவில் உலா வரும் நெட்டிசன்களுக்குதான் எங்கிருந்து உடனுக்குடன் வீடியோக்கள் கிடைக்குமோ தெரியலை.. அன்றாட நிகழ்வுகளுக்கு ஏற்ப சுடச் சுட வீடியோக்களை பகிர்ந்து தள்ளுகின்றனர்.
அப்படி ஒரு வீடியோதான், உண்டியலில் காசு போட்டதை நியாயப்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலு பேசுகிற நகைச்சுவை காட்சி. அந்த காட்சியில் அர்ச்சகர் ஒருவருக்கும் வடிவேலுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.

" ஏன்டா என் தட்டுல இருந்து காசு எடுத்த?"
"காசு எடுத்து பையிலயா போட்டேன்.. பகவானுக்குதான் போட்டேன்"
"என் காசை எடுத்து உண்டியலில் போடுறதுக்கு நீ யாருடா கட்டையில போறவனே"
"உன் காசுன்னு எவன்யா சொன்னான்.. என்னை மாதிரி 10 பக்தர்கள் போட்ட காசு"
"10 பைசா பாக்கி இல்லாம எல்லாத்தையும் தூக்கி உண்டியலில் போட்டா என் வயித்துக்கு என்ன பண்றது"
"பெரிய வயிறு.. வயிறு... உடைக்கிற தேங்காய கொண்டு போயிடற, அவிக்கிற சுண்டலையும் கொண்டு போயிடற.. அதான் மாச மாசம் சம்பளம் தருவாங்கல்ல.. அப்புறம் ஏன் தட்டுல போடுற காணிக்கையையும் கொண்டு போற... பகவானுக்கு எடுத்துப் போட்ட காசையா பழிக்கிற நீ.. திருப்பி வருவேன்.. தட்டுல காசு இருந்தா மறுபடியும் எடுத்து போடுவேன்.. இஷ்டமில்லைன்னா வேற வேலைக்கு போ"
இப்படியான 0.31 செகண்ட் வீடியோதான் இன்றைக்கு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக ரெக்கை கட்டிப் பறக்குது!
காரணம் என்ன?: தூத்துக்குடி வெள்ள பாதிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது ஶ்ரீ வைகுண்டம் பெருமாள் கோவில் பிரச்சனை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார் நிர்மலா சீதாராமன். இந்த ஆலோசனையின் போது பக்தர் ஒருவர், ரூ30,000 தர தாம் தயாராக இருப்பதாக கூறினார். உடனே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு, அந்த பணத்தை உண்டியல்ல போடாதப்பா.. எங்க கொடுக்கனுமோ அங்க கொடுங்க என கூறினார். இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications