தங்கம், வைர நகைகள் மாயம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பணியாளர் மீது சந்தேகம் ஏன்? பரபரப்பு தகவல்கள்
தங்கம், வைர நகைகள் மாயம்- ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பணியாளர்கள் மீது சந்தேகம் ஏன்
சென்னை: தங்கம், வைர நகைகள் மாயமான நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பணியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது எதனால் என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.
தமிழில் 3 , வை ராஜா வை உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநரானார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுஷை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது தந்தையின் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். தற்போது அவர் விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

60 பவுன் நகைகள்
இந்த நிலையில் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு எனது தங்கை சவுந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 60 சவரன் நகை, வைர நகைகளை லாக்கரில் பூட்டி வைத்திருந்தேன்.

ஆழ்வார்பேட்டை
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தனர். பின்னர் முன்னாள் கணவர் தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கும் லாக்கர் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனில் குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது.

போயஸ் தோட்டம்
கடந்த மாதம் போயஸ் தோட்டம் வீட்டின் லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்கம், வைரம், ரத்தினம் பதித்த நகைகள் காணாமல் போயுள்ளது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளது. நான் லாக்கரின் சாவியை எங்கே வைப்பேன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு தனது புகாரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தாமத புகார் ஏன்
இவர் 3 வீடுகளில் மாறி மாறி இருந்துள்ளதால் அங்குள்ள பணியாளர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் நகைகள் காணாமல் போன நிலையில் தற்போது புகார் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வியை போலீஸார் கேட்டு அவர்களுக்கு ஐஸ்வர்யாவின் பதில் என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications