Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரியலூர் மாணவி வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு மனு போடப்பட்ட நிலையில்.. சிபிஐ விசாரணை ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரியலூர் மாணவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோரி மாணவியின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்த நிலையில் வழக்கு சிபிஐ தரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

அரியலூரை சேர்ந்த அந்த மாணவி தஞ்சாவூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி நிர்வாகம் மத மாற்றம் செய்ய சொல்லி கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. அதே சமயம் பள்ளி வார்டன் வேலை கொடுத்து டார்ச்சர் செய்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக மெஜிஸ்டிரேட் வாக்குமூலத்தில் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

இந்த நிலையில் அரியலூர் மாணவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோரி முதலில் மாணவியின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தனர். மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக கூறிய நீதிபதி, முதலில் மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்யும்படி கூறினார். அதோடு தஞ்சை மேஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் அளிக்கும்படி கூறினார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அதன்படியே மாணவியின் பெற்றோரும் 2.30 மணி நேரம் தஞ்சை மேஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் அளித்தனர். அடுத்த கட்ட விசாரணையில் மாணவியின் கடைசி வீடியோவை எடுத்த நபரை தஞ்சை எஸ்பி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டது. அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர் வீடியோ எடுத்த போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

ஒத்துழைப்பு அளிக்கவில்லை

ஒத்துழைப்பு அளிக்கவில்லை

இதில் போலீசார் தரப்பு வைத்த வாதத்தில், மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் காரணம் என்று அந்த மாணவி கொடுத்த மேஜிஸ்டிரேட் வாக்குமூலத்தை சமர்ப்பித்தனர். அதோடு மாணவியை வீடியோ எடுத்த நபர் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று போலீசார் தரப்பு வாதம் வைத்தனர். மாணவியின் பெற்றோர் வைத்த வாதத்தில், போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாணவியின் மற்ற வாக்குமூலம் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

சிபிஐ

சிபிஐ

இதை போலீஸ்தான் வேண்டும் என்று வெளியிட்டு இருக்கிறது. மாணவி மரணம் குறித்து எஸ்.பி ஊடகங்களில் ஒரு தலைப்பட்சமாக பேசி இருக்கிறார். அதனால் வழக்கை சிபிஐ தரப்பிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது முதலில் சிபிசிஐடி தரப்பு இதை விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மனு அளித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில் மாணவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வாதம் வைத்தனர்.

Recommended Video

    தஞ்சாவூர்: எங்கள் பள்ளியில் மதமாற்றத்திற்கு இடமே இல்லை…. முன்னாள் மாணவிகள் திட்டவட்டம்!
    சிபிஐ

    சிபிஐ

    பெற்றோ வாதத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கடந்த முறை குறிப்பிட்டனர். இந்த நிலையில்தான் மனுவில் சிபிசிஐடி விசாரணை கோரி முதலில் மாணவியின் பெற்றோர் மனுவில் குறிப்பிட்டு இருந்தாலும் தற்போது மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+