Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிளைமேக்ஸ்" நாளை.. கருணாநிதிக்கு அன்று வந்த அதே சிக்கல்.. திணறும் வைகோ.. மதிமுகவில் வீசும் புயல்

வைகோ நாளைய தினம் பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்க உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்தே வரும் நிலையில், நாளை கூடுகிறது அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்..!

துரை வைகோவுக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

காரணம், அன்று திமுகவில் கருணாநிதியிடம் வாரிசு அரசியலை எதிர்த்துதான், கட்சியைவிட்டு வெளியே வந்தார் வைகோ.. மதிமுகவை தொடங்கியதும் அதற்குபிறகுதான்..!

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

அப்படி இருக்கும்போது தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா? என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் தலைதூக்கி வருகின்றன.. சில மாதங்களுக்கு முன்பு, துரை வையாபுரியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் திட்டவட்டமாக சொல்லி வந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, வைகோ மகன், துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராகவும் நியமிக்கப்பட்டது கட்சிக்குள் ஒரு பிரிவினரிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 4 பேர் எதிர்ப்பு

4 பேர் எதிர்ப்பு

துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருகட்டத்தில் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்தது பரபரப்பை அதிகமாகிவிட்டது.. கடந்த சில தினங்களாக, மதிமுக மாவட்ட செயலாளர்கள் 4 பேர் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.. சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன் விருதுநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

வைகோ

வைகோ

அப்போது "மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்... இந்த கட்சி திமுக வில் இருந்து பிரியும்போது, திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக சொல்லித்தான் பிரிந்தது. இப்போதும் அதே நிலையில் தன்னுடைய மகனை துணைப் பொதுச் செயலாளராக கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார்... எனவே அவரது இந்தக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... அதனால், இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்... மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றனர்.

 பொதுக்குழு

பொதுக்குழு

இப்படிப்பட்ட சூழலில்தான் நாளை மதிமுக பொதுக்குழு கூடுகிறது.. இந்த பொதுக்குழுவில்தான், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க வைகோ யோசித்து வருவதாகவும், அதற்கேற்ற வகையில் கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் கசிந்தன..

 15 மா.செக்கள்

15 மா.செக்கள்

இப்போது 15 மா.செ.க்கள் மட்டுமல்லாமல், மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரிடமும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், இதை வைகோ எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், அதிருப்திக்குள்ளாகி இருக்கும் மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது... எனவேதான், அதிருப்தியாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க வைத்து அவர்களை சரிகட்ட வைகோ முயற்சித்து வருகிறாராம்.. சமாதானப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளாராம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+