இவங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்காங்க! சிஎஸ்கே அணியில் பெரிய பிரச்சனை! என்ன செய்வார் தோனி? குழப்பம்
சென்னை: சிஎஸ்கே அணியில் ஆடும் முக்கியமான 2 வீரர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன.
சிஎஸ்கே அணி வரிசையாக இரண்டு தோல்விகளை சந்தித்த நிலையில் அந்த இரண்டு வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

சிஎஸ்கே பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.
ஆனால் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரின் பேட்டிங் பார்மில் இல்லை. பவுலிங்கும் பெரிய பார்மில் இல்லை. அவர் பெரிதாக எந்த போட்டியிலும் விக்கெட் எடுக்கவில்லை.
பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங்கிலும் எந்த இடத்தில் இறங்கினாலும் பெரிதாக ஆடுவது இல்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் சாண்ட்னர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.

இதனால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் தற்போது அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.
இன்னிங்ஸ்:- 5
ரன்கள்:- 74
சராசரி:- 24.67
ஸ்டிரைக் ரேட்:- 148
அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.
அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவரும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக அணிக்குள் மிட்சல் சான்டர் மற்றும் ஒரு இந்திய வீரரை கொண்டு வர வேண்டும். இவர்கள் இந்திய அணியில் இருப்பதால்தான் அணிக்குள் பெரிய குழப்பமே நிலவி வருகிறது.
இவர்களை நீக்க வேண்டும். மாறாக ராயுடுவிற்கு பதிலாக ராஜவர்தான் ஹங்கரேக்கர் போன்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். அவர் நல்ல ஹிட்டர். அதேபோல் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடிய வீரர். அதனால் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications