Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சாரம்.. அந்த வித்தியாசம் இருந்தால் அபராதம்.. ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் என, தெரிவித்து விட்டு, குறைவாக வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் ஆகியவற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன .இதுதவிர தமிழக அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களும் உள்ளன. இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் அனல், எரிவாயு, காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.

why did Electricity Regulatory Commission decided to impose a fine of up to 5 cents per unit

மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு கோடை காலங்களில் தினசரி 6,972 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டது.பொதுவாக தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மின்சாரம் வழங்கப்படுகிறது.

ஆனாலும் தமிழக மின் வாரியத்திற்கு மின்சாரம் போதவில்லை. மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான் தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதை பூர்த்தி செய்ய தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள செய்கிறது.

தற்போதைய நிலையில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையாக கிடைத்தாலும், இந்த மின்சாரம் நாள் முழுவதும் நிலையாக தொடர்ந்து ஒரே மாதிரியாக கிடைப்பது இல்லை. இதனால் சில நேரங்களில் பற்றாக்குறை ஏற்படும் போது சிக்கல் ஏற்படுகிறது.

அதேநேரம் காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய இரு வகை மின்சாரமும் வழங்க, மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனங்கள், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை கூற வேண்டும்.. அதுவும் 96 பகுதிகளாக பிரித்து, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு, முந்தைய நாளே மின்சாரம் எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

why did Electricity Regulatory Commission decided to impose a fine of up to 5 cents per unit

காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் இன்று அதிக அதிக மின்சாரம் கிடைக்கும் என, தெரிவித்து விட்டு, குறைவாக வழங்கினால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் வாரியத்திற்கு சிரமம் ஏற்படுவதுடன், வெளிச்சந்தையில் சட்டென மின்சாரம் வாங்க வேண்டிய காரணத்தால் மின் வழித்தடங்களிலும் பாதிப்பும் ஏற்படுகிறது.

எனவே, முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருந்தால், ஒரு யூனிட்டிற்கு அதிகபட்சம், 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்திருக்றிது. இதுகுறித்து, வரைவு அறிக்கை வெளியிட்டு, கருத்து தெரிவிக்கவும், ஆலோசனை வழங்கவும் அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் அளித்திருக்கிறது. இந்த அவகாசத்திற்குள் மின் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+