“ஸ்டாலின் என்னை ஏமாற்றிவிட்டார்.. திமுகவில் வைட்டமின் M தான் முக்கியம்”.. சிம்லா முத்துச்சோழன் பரபர!
சென்னை: திமுக மூத்த தலைவர்களுள் ஒருவரான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தான் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் காப்பாற்றவில்லை என சிம்லா முத்துச்சோழன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார்.

சிம்லா முத்துச்சோழன் விளக்கம்: மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக முன்னணி நிர்வாகியான சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது ஏன் என சிம்லா முத்துச்சோழன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் இணைந்த பிறகு சிம்லா முத்துச்சோழன் அளித்துள்ள பேட்டியில், "2008 முதல் திமுகவில் முழுநேரமாக பணியாற்றத் தொடங்கினேன். எனது அரசியல் ஈடுபாட்டை பார்த்து எனக்கு சில பொறுப்புகளை வழங்கினார்கள். 2016ல் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் எனக்கு ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்கள்.
எனக்கு ஸ்டாலின் உறுதி கொடுத்தார்: ஜெயலலிதாவை எதிர்த்து நின்றாலும், திமுகவுக்கு நான் டெபாசிட் வாங்கிக் கொடுத்தேன். அடுத்த 1 வருடத்தில் இடைத்தேர்தல் வந்தபோது எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அப்போது என்னை அழைத்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிப்பேன் என மூத்த முன்னோடிகள் முன்னிலையில் எனக்கு உறுதி அளித்தார்.
ஆனால், அதன் பிறகு எனக்கு எந்த தேர்தலிலும் வாய்ப்பு அளிக்கவில்லை. ஸ்டாலின் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார். அதனை அவருக்கு நினைவூட்டி பலமுறை கடிதம் கொடுத்தேன். ஆனால், அவர் தரப்பில் இருந்து எனக்கு எந்த பதிலும் இல்லை.

திமுக தலைமை பெர்மிஷன் தரவில்லை: எனது அத்தை சற்குண பாண்டியனும், எனது கணவரும் மறைந்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் 6 நாள் சுற்றுப்பயணமாக ஒரு பைக் ரைடு செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்கும் திமுக தலைமை அனுமதிக்கவில்லை. திமுகவில் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலில் திமுகவில் இருந்து விலகியுள்ளேன். மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.
அதிமுகவில் நிச்சயம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அந்த நம்பிக்கையோடு தான் வந்திருக்கிறேன். திமுகவில் தற்போது வாரிசுகளுக்கு மட்டும் தான் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அப்பா எம்.எல்.ஏ, எம்.பியாக, அமைச்சராக இருக்கும்போது அவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கிறார்கள். எனக்கு மட்டும் அங்கீகாரம் தர மறுக்கிறார்கள்.
திமுகவில் பணம் தான்: திமுகவில் வைட்டமின் M தான் முக்கியமானதாக உள்ளது. இப்போது உள்ள திமுகவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் வைட்டமின் எம் தான் தேவையாக உள்ளது. அது இல்லாவிட்டால் இங்கு எதுவுமே கிடைக்காது" என காட்டமாகக் கூறியுள்ளார் சிம்லா முத்துச்சோழன்.
-
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
அடி தூள்! காலையில் கோரிக்கை.. மாலையே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. பத்திரிகையாளர் பென்ஷன் உயர்வு! -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications