ஆக்சன் எடுத்த அப்பாவு! கோபமாக பேசிவிட்டு.. பட்டென வெளியேறிய வானதி! "அப்போ சரிதான்".. ஸ்டாலின் சுளீர்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று கிறிஸ்துவ இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பாஜகவை கிண்டல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி இன்று தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் பல்வேறு பிரிவுகளுக்கு ஜாதி வாரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு ஒரு பக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீடு மாநில அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகபட்ச இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ஆதி திராவிடர்களாக இருந்து கிறிஸ்துவர்களாக மாறியவர்களுக்கு தொடர்ந்து ஆதி திராவிடர் பிரிவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.
ஆதி திராவிடர்கள் எஸ்டி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். ஆனால் இவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் (Backward Caste) சான்றிதழ் அளிக்கப்படும்.
இதனால் இவர்களுக்கு எஸ்டி ரீதியாக கிடைக்கும் இடஒதுக்கீடு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்து உள்ளார்.

பேச்சு: தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க வேண்டும்.
வரலாற்று ரீதியாகவே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியாக இருக்கும். அதன் மூலமாக அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.
சமூகரீதியாக தரப்பட்ட உரிமைகளை தர மறுப்பது சரியல்ல. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்"
இதனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது, என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பாஜக எதிர்ப்பு: இந்த சட்டத்தை பாஜக அவையில் கடுமையாக எதிர்த்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதை கடுமையாக எதிர்த்து அவையில் பேசினார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து அவையில் இருந்து வானதி சீனிவாசன் கோபமாக வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் மற்ற 3 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கு தீர்மானம் ஏனோதானோ என கொண்டுவரப்படவில்லை, இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசிய பிறகுதான் இதனை முன்மொழிந்திருக்கிறோம்.
பா.ஜ.க வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது, என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார்.












Click it and Unblock the Notifications