ரோபா சங்கருக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை.. சர்ச்சையானதால் நடிகர் வடிவேலு தந்த விளக்கம்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. இதனை யூடியூபர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்ததாது ஏன்? என்று நடிகர் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் கடந்த 18 ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் அவரது உடல்நலம் சரியாகவில்லை. நிலைமை மோசமானது. இதையடுத்து கடந்த 18 ம் தேதி காலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அங்குள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை பலனின்றி அன்று இரவு ரோபோ சங்கர் காலமானார்.
அதன்பிறகு கடந்த 19ம் தேதி ரோபோ சங்கரின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நட இந்நிலையில் தான், ரோபா சங்கரின் மறைவுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பல யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்தனர். நடிகர் வடிவேலு அவருடன் நடித்த நடிகர்களின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதே இல்லை என்று பல யூடியூபர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் அந்த விமர்சனத்துக்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். ரோபோ சங்கர் மறைந்த நாளில் ஊரில் இல்லாததால் தான் அஞ்சலி செலுத்த வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications