ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. "அவர்" இன்னும் வீட்டையே காலி செய்யலையாமே.. என்னாச்சு?
அரசு பங்களாவை தனபால் இன்னும் காலி செய்யவில்லை என்கிறார்கள்
சென்னை: சபாநாயகர் அப்பாவுவுக்கு வீடு இல்லையாமே.. அரசு பங்களாவில் அவர் தங்கவுமில்லை.. இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது கசிந்து வருகிறது.
சென்னை கீரின்வேஸ் சாலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பங்களாக்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்சரி, பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்களில் தான் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

ஸ்டாலின்
அந்த வகையில், கடந்த 10 வருஷமாக அதிமுகதான் ஆண்டு வந்தது.. அதனால், அதிமுக மாஜிக்கள் இந்த பங்களாக்களில் தங்கி இருந்தனர்... தற்போது திமுக ஆட்சிக்கு வரவும், புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களையும் காலி செய்தனர்..

அவகாசம்
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டிருந்த நிலையில், அவரை அந்த வீட்டிலேயே தங்கி கொள்ள ஸ்டாலின் ஓகே சொன்னார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்தான்.. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது, கிட்டத்தட்ட அமைச்சர் பதவிக்கு சமமானது.. கேபினட் பதவிக்கு ஒப்பானது..

கோரிக்கை
அதனால், தன்னை தொடர்ந்து அதே வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.. இதற்கும் ஓகே சொன்னார் ஸ்டாலின். அதாவது நேர் எதிர்க்கட்சி தலைவர்கள், தன்னை காலமெல்லாம் விமர்சித்து வரும் தலைவர்கள், இனியும் விமர்சிக்க போகிறர்கள் என்று தெரிந்தும் இவர்களின் கோரிக்கைக்கு முதல்வர் சம்மதித்தது அவரது பெருந்தன்மை.

நோட்டீஸ்
இப்போது விஷயம் என்னவென்றால், முன்னாள் சபாநாயகர் தனபால் இன்னும் அந்த வீட்டை காலி செய்யவில்லையாம்.. இத்தனைக்கும் நோட்டீஸ் எப்போதோ தரப்பட்டுவிட்டது.. காலி செய்யும்படி அனைவருக்குமே ஓபனாக கோரிக்கையும் விடுக்கப்பட்டுவிட்டது.. கோரிக்கை விடுக்கப்படுகிறதோ இல்லையோ, ஆனால், புதிய ஆட்சி வந்ததும், நாமளாகவே வீட்டை காலி செய்திருக்க வேண்டும் என்பது மரபு.

வேறு வீடு
ஆனால், தனபால் இன்னும் காலி செய்யவில்லை.. குடியேறுவதற்கு வேறு வீடு பார்த்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. தனபால் தங்கி உள்ள வீடு, தற்போதைய சபாநாயகர் அப்பாவுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடு ஆகும்.. தனபால் அங்கேயே இருப்பதால், அப்பாவுவுக்கு தற்சமயம் வீடு இல்லாத சூழல் உருவாகி உள்ளது..

தர்மசங்கடம்
அதிமுக மாஜிக்களை காலி செய்யுங்கள் என்றும் சொல்லியாகிவிட்டது.. நோட்டீசும் தரப்பட்டுவிட்டது.. 2 மாசமும் முடிந்துவிட்டது.. வீட்டை காலி செய்யுங்கள் என்று தனபாலிடம் சொல்வதற்கு திமுக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, விரைவில், மான்ய கோரிக்கை பட்ஜெட்டும் துவங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சபாநாயகருக்கே குடியிருக்க வீடு இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications