50 வருடம் ஆச்சாம்! வழக்கத்துக்கு மாறா.. ஜீப்பை எடுத்த "தலைவர்".. பேச்சை கேட்டதும் நெகிழ்ந்த முதல்வர்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நீலகிரியில் ஜீப் பயணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. ராணுவ அதிகாரியுடன் அவர் நீண்ட நேரம் இந்த பயணத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் தற்போது ஊட்டிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டு. மொத்தம் 20 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நேற்று முதல்வர் ஸ்டாலின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

ஊட்டி
பின்னர் ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். அதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார். இந்த நிலையில்தான் வெலிங்டனில் போர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் வெலிங்டனில் உள்ள ராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஊட்டி
இந்தியாவில் உள்ள முக்கியமான ராணுவ கல்வி நிறுவனங்களில் வெலிங்டன் ராணுவ கல்லூரியும் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பலருக்கும் பல விதமான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏன் இந்தியாவின் நட்பு நாடுகளில் இருந்தும் கூட இங்கு வந்து பலர் பயிற்சி பெற்று செல்கிறார்கள். இங்குதான் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஸ்டாலின் லெப்டினன்ட் ஜென்ரல்
அங்கு எப்படி பயிற்சி வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். நேற்று இந்த பயணத்தின் போது சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் வந்ததும் அவரை கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜென்ரல் எஸ் மோகன் வரவேற்றார். அவர் தமிழர். சக ராணுவ அதிகாரிகள் சிலரிடம் வேறு மொழிகளில் பேசிக்கொண்டு இருந்தவர்.. முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் சரளமாக தமிழில் பேசினார்.

நெகிழ்ச்சி
இவரை முதல்வர் நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். அதன்பின் முதல்வர் ஸ்டாலினை இவரே ஜீப்பில் ஏற்றி அப்பகுதியை சுற்றிக்காட்டினார். லெப்டினன்ட் ஜென்ரல் ஒருவர் இப்படி ஜீப் ஓட்டியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது வழக்கம் கிடையாது. லெப்டினன்ட் ஜென்ரல் எஸ் மோகன் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலினும் இவரிடம் நட்பாக பழகி, ராணுவ பயிற்சி மையம் குறித்து கேள்வி எழுப்பினார்.

நேரில் பார்வையிட்டார்
முதல்வர் ஸ்டாலின் நேற்று இங்கு பார்வையிட முக்கிய காரணம் உள்ளது. முதல்வர் ஒருவர் இந்த இடத்தை பார்வையிடுவது இதுவே கடந்த 50 வருடங்களில் இரண்டாவது முறையாகும். முன்னதாக முதல்வராக இருந்த போது கருணாநிதி இங்கு பார்வையிட்டார். அதன்பின் தற்போது முதல்வர் ஸ்டாலின் 50 வருடத்திற்கு பின் இங்கு பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications