2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்யும் கூட்டம் ஏன் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது என்ற உண்மை வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்யும் கூட்டம் ஏன் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது என்ற உண்மை வெளியாகி உள்ளது. சீனாவிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில் இருக்கும் வரலாற்று பந்தம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

என்ன காரணம்
இந்த நிலையில் மகாபலிபுரத்தை இந்த சந்திப்பிற்கு தேர்வு செய்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது. இந்தியாவின் பிற பகுதியில் திபெத்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் திபெத்தியர்கள் குறைவு. இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் போது போராட்டங்கள் குறைவாக நடக்கும். பிரச்சனைகள் இருக்காது.

எப்படி இருக்கிறது
அதேபோல் பாதுகாப்பு ரீதியாகவும் சென்னையை பரிந்துரை செய்துள்ளது மத்திய அரசு. தென்னிந்தியாவில் அதிக பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகிறது. சீன அதிபர் போன்று உலகின் சக்தி வாய்ந்த நபர் வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சென்னைதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.

சீனா எப்படி
இதெல்லாம் போக மகாபலிபுரத்திற்கும் சீனாவிற்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது. சீன துறவி யுவாங் சுவாங் இங்கு வந்திருக்கிறார். சீன துறவிகள் பலர் மகாபலிபுரத்திற்கு வந்து தியானம் செய்துள்ளனர். இதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளது.

2000 வருடம்
அதேபோல் மகாபலிபுரத்தில் இருந்துதான் சீனாவிற்கு 2000 வருடங்கள் முன் கடல் போக்குவரத்து இருந்துள்ளது. மகாபலிபுரம் துறைமுகம்தான் சீனாவுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்துள்ளது. இரண்டு பகுதிகளும் வரலாற்று ரீதியாக, பொருளாதார ரீதியாக நிறைய பந்தங்களை கொண்டுள்ளது. இங்கு ஆலோசனை செய்தால் இந்தியா - சீனா உறவு இன்னும் நெருக்கம் அடையும் என்று கூறுகிறார்கள்.

அதிபர்
மேலும் சீன அதிபர் தமிழகம் வந்தால், தமிழர்கள் பெருமை அடைவார்கள். அதை தேர்தல் ரீதியாக பயன்படுத்த முடியும் என்று பாஜக நினைப்பதாகவும் கூறுகிறார்கள். ஆகவே இங்கு கூட்டம் நடத்துவதே சரியாக இருக்கும் என்றும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications