ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கானை திடீரென சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் சொன்ன விளக்கம்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் தன்னைச் சந்தித்தது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சமீபத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நடைபெற்ற கட்சி செயல்வீரர்கள் கூட்டத்திற்குச் சென்றபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் திரண்டு தினகரனை வரவேற்றனர்.
இது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் சையது கான், அமமுகவில் இணையப் போகிறாரா அல்லது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு வேண்டிச் சந்தித்தாரா என்றும் கேள்வி எழுந்தது.
ஆனால், கடைசி வரை அதிமுக தொண்டன், ஓபிஎஸ் விசுவாசி எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் சையது கான். இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி ஆதிக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைமை அலுவலகமும் அவர் கைக்குச் சென்றது. தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி வ்ருகிறார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து பதவிகளுக்கும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். தொடர்ச்சியாக பலத்த பின்னடைவுகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வந்த நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரள்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய சந்திப்பு
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளருமான சையது கான் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்ட செயலாளர் சையது கான், அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் சென்று டிடிவி.தினகரனை உற்சாகமாக வரவேற்றார்.

டிடிவி தினகரன்
இந்தச் சந்திப்பு அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கேட்டு, டிடிவி தினகரனை சையது கான் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று விளக்கம் அளித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு டிடிவி.தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

2024ல் சட்டமன்றத் தேர்தல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், "திமுக ஆட்சியில் ஊழல் பெருகி வருகிறது. என்ஐஏ சோதனை, போதைப் பொருட்கள் போன்றவை கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை போன்று நீடித்து வருகிறது. இதை எல்லாம் பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து 2024ல் சட்டமன்ற தேர்தல் வரும் என்றே தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என யூகத்தின் அடிப்படையிலேயே தெரிவித்தேன்.

யாருடன் கூட்டணி?
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு அமமுக தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மத்தியில் உள்ளது இரண்டு கட்சிகள் தான். பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆக வேண்டும். தேர்தல் நேரத்தில் அதைத் தெரிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

சந்திப்பு ஏன்?
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானை சந்தித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த டிடிவி.தினகரன், "தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் உடனான சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு தான். அதில் அரசியல் இல்லை:" எனத் தெரிவித்தார்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications