இட ஒதுக்கீடு...ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்...எல். முருகன் கேள்வி!!
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் இதுவரை இன்னும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும். ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தி. நகரில் இருக்கும் பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு இன்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வந்திருந்தார். அவர் அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''நாடு முழுவதும் பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 15 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுவும் மாநிலங்களில் இருக்கும் இந்த மக்களின் சதவீதத்தைப் பொறுத்து மாறுபடும். அப்படி பார்க்கும்போது, பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும்.

ஏன் ஆட்சியில் இருந்தபோது இதை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கவில்லை. அவர் மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்துள்ளார். அவரது எம்.பி.க்கள் ஏன் இதுபற்றி வலியுறுத்தவில்லை. கடுமையாக உழைத்து முன்னேறிய நீதிபதிகளை ஆர்.எஸ். பாரதி இழிவாகப் பேசினார். அப்போது, ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல், தலைமை செயலாளரை சந்தித்த திமுக எம்.பி.க்கள், ''நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கும் இன்று வரை ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை.
சரத்குமார், ரஜினிகாந்த் இருவர் மட்டுமே கந்த சஷ்டி கவசம் இழிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஏன் பிற கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. தனக்கும் கறுப்பர் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழ் மற்றும் இந்து சமுதாயம் இதற்கு எதிர்வினையாற்றும். இதை நான் எச்சரிக்கையாக ஸ்டாலினுக்கு கூறுகிறேன்'' என்று தெரிவித்தார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications